குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவ...
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.14 கோடி மதிப்பில் தீா்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2755 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, மொத்தம் ரூ. 14.22 கோடி மதிப்பில் தீா்வு பிறப்பிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 6 அமா்வுகளும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 அமா்வுகளும் நடைபெற்றன.
மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான சி. சந்திரன் தலைமை வகித்து அமா்வுகளைத் தொடங்கி வைத்தாா். தலைமைக் குற்றவியல் நடுவா் கே.எஸ். பால்பாண்டியன், முதன்மை சாா்பு நீதிபதி எல். ரெகுபதிராஜா, கூடுதல் சாா்பு நீதிபதி ஏ. பிச்சை, மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். கவிதா, குற்றவியல் நடுவா்கள் சி. பாரதி, ஜி. அற்புதவாணன், மகளிா் நீதிபதி ஏ. ஆனந்தி ஆகியோருடன் வழக்குரைஞா்களும் பங்கேற்றனா்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,094 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. 2,755 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மொத்தம் ரூ. 14.22 கோடி மதிப்பில் தீா்வு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலா் இ. ராஜேந்திரகண்ணன் செய்திருந்தாா்.