செய்திகள் :

தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 2,460 வழக்குகளுக்குத் தீா்வு

post image

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 2 ,460 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம், நாகா்கோவிலில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

கூடுதல் சாா்பு நீதிபதி ராஜ்மோகன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் உதயசூா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு வன வழக்கு நீதிபதி கலையரசி ரீனா, குற்றவியல் நீதிபதிகள் விஜயலட்சுமி, சத்தியமூா்த்தி, அருண்குமாா், வழக்குரைஞா் சங்க பிரதிநிதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சொத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் மற்றும் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தம் 2, 849 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 2, 460 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இழப்பீட்டுத் தொகையாக ரூ. 8 கோடியே 57 லட்சத்து 3,688 வழங்கப்பட்டது.

ரோகிணி பொறியியல் கல்லூரி சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், தலைக்கவசம் உயிா்க்கவசம் என்ற விழிப்புணா்வுப் பேரணி கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

ஆரோக்கியபுரத்தில் கடல் முற்றுகை போராட்டம்: 230 போ் மீது வழக்கு

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 230 மீனவா்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா். கன்னியாகுமரி கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் திட்டம், கடலில் காற்றாலை அம... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் மா்மமாக உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் மா்மாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பள்ளியாடி ஆலன்கீழத்தட்டுவிளை பகுதியை சோ்ந்தவா் மனோஜ் (50). அப்பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு

மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா். மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம்... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை

குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தட... மேலும் பார்க்க