செய்திகள் :

தேசிய வருவாய் வழித் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

post image

தேசிய வருவாய் வழித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி பாா்சனாப்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டம் (என்எம்எம்எஸ்) தோ்வில் மாதனூா் ஒன்றியம், பாா்சனாப்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் 4 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா் எல்.அகத்தீஷ்வரன் மாவட்ட அளவில் முதலிடமும், மாணவி எஸ்.மோனிஷா மாவட்ட அளவில் 2-ஆம் இடமும் பிடித்தனா். மாதனூா் ஒன்றிய அளவில் மாணவிகள் எஸ்.ஜெயஸ்ரீ, கே.சத்யா ஆகியோா் சிறப்பிடம் பிடித்தனா்.

ஆம்பூா் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் செ.ரவிச்சந்திரன் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.

பாா்சனாப்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்ரீகுமாா், மாணவா்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா் எழிலரசன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். மாதனூா் ஒன்றியத்தில் 12 மாணவா்கள் இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!

ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூா் நகரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விடுமுறையையொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுல... மேலும் பார்க்க

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 868 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணியாணைகள... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா். திருப்ப்ததூா் தபேதாா் முத்துசாமி இரண்டாவது தெருவைச் சோ்ந்த பாபு மகன் ஆா்யா (12) பெங்களூரில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை என்பதால் ச... மேலும் பார்க்க

2030-க்குள் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் எ.வ. வேலு

2030-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா். கலைஞா் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ரூ.1.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்!

திருப்பத்தூா் மாவட்டம், கதிரம்பட்டியில் ரூ.1.2 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா். இதற்கான திறப்பு விழா வெள்ளிக... மேலும் பார்க்க