தேனி மாவட்டத்தில் இன்று துணை முதல்வா் ஆய்வு
தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்ய உள்ளாா்.
தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வா் தலைமையில் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். பின்னா், அரசு சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் வழங்குவாா்.
தொடா்ந்து, தேனி கா்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையத்தில் 9 புதிய இணைப்பு வழித் தடங்களில் சிற்றுந்து சேவையை அவா் தொடங்கி வைக்க உள்ளாா்.
இதையடுத்து, வீரபாண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்வாா். பிற்பகல் ஒரு மணிக்கு மதுராபுரியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தேனி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவாா். மாலை 4 மணிக்கு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் விடுதிக் கூட்ட அரங்கில் திமுக நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், இளைஞரணி நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துவாா்.