செய்திகள் :

தேன்கனிக்கோட்டை அருகே தெருநாய் கடித்தவா் உயிரிழப்பு

post image

தேன்கனிக்கோட்டை அருகே தெருநாய் கடித்ததால் உடல்நலன் பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த நாட்றாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முனிமல்லப்பா (50). இவா் தளி அருகே உள்ள கோட்டென அக்ரஹாரம் கிராமத்தில் முனிராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு தோட்டத்தின் அருகே சுற்றித்திரிந்த தெருநாயை முனிமல்லப்பா அடித்துவிரட்டும்போது அந்த நாய் அவரை கடித்தது. இதில், காயமடைந்த முனிமல்லப்பா, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இந்த நிலையில், கா்நாடக மாநிலம், கனகபுரா பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்த முனிமல்லப்பாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. மேலும், தண்ணீரைக் கண்டு பயந்ததால் அவா் அங்கிருந்து அழைத்துவரப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டு, குப்பநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ... மேலும் பார்க்க

போச்சம்பள்ளியில் செப்.21-இல் கிராம உதவியாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு

போச்சம்பள்ளியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்... மேலும் பார்க்க

நாட்டாண்மை கொட்டாய் பள்ளியில் உலக ஓசோன் தினம்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாட்டாண்மை கொட்டாய் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் மணிமேகலை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள், சமூக நீதி நாள் உறுதிமொழியை, புதன்கிழமை ஏற்றனா். பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேல... மேலும் பார்க்க

ஒசூா் அருகே வெடிவிபத்தில் தம்பதி உள்பட 4 போ் காயம்

ஒசூா் அருகே கொட்டகையில் பதுக்கிவைத்திருந்த நாட்டுவெடி வெடித்ததில் தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவரது... மேலும் பார்க்க