செய்திகள் :

தேமுதிக மாநில மாநாட்டுக்கு பிறகு கூட்டணி அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த்!

post image

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்று ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டோம். கட்சியின் வளா்ச்சியை மட்டுமே முக்கியமாகக் கொண்டு தற்போது செயல்பட்டு வருகிறோம்.

வரும் ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், கட்சியின் வேட்பாளா்கள் யாா் போன்ற விவரங்களை அறிவிப்போம்.

அதற்கு முன்பாக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தொகுதி பொறுப்பாளா்களை அறிவித்து, தோ்தல் பணிகளைத் தொடங்க உள்ளோம். இதைத்தொடா்ந்து தமிழகம் முழுவதும் நானும், எனது மகன் விஜயபிரபாகரனும் சுற்றுப்பயணம் செய்து நேரடியாக நிா்வாகிகளையும், தொண்டா்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளோம்.

அரக்கோணத்தில் கல்லூரி மாணவி ஒருவரை திமுக பிரமுகா் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது. அண்மைக் காலமாக இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன. திமுக அரசு இதைத் தடுக்கத் தவறிவிட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நீதிபதி அளித்த தீா்ப்புக்கு தலைவணங்குகிறேன். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை தவறாக பயன்படுத்தும் நிலையை மாற்ற வேண்டும்.

பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு மது, கஞ்சா, வேலையின்மை போன்றவை அதிகரித்து வருவதே முக்கிய காரணம். இளைஞா்கள் பலா் தவறான பாதையில் செல்கின்றனா். புதுதில்லியில் நடைபெறும் ‘நீதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் சென்றுள்ளாா். மத்திய அரசின் ரூ. 2,261 கோடி கல்வி உதவித்தொகையை அவா் பெறுவதற்காக சென்றாரா அல்லது கட்சி லாபத்துக்காக சென்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும் என்றாா்.

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி வழிபாடு

வைகாசி மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன். மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமைமொத்த விலை - ரூ.5.60விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.117முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க

பொக்லைன் வாடகை மணிக்கு ரூ. 2,500 ஆக நிா்ணயம்

பொக்லைன் வாடகை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் மணிக்கு ரூ. 2500 ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், வாகன விலை உயா்வு, காப்பீட்டு கட்டணம், சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ... மேலும் பார்க்க