செய்திகள் :

தேர்தல் வெற்றிக்கு ஜம்முவில் இருந்துக்கூட வாக்காளர்களைச் சேர்ப்போம்: கேரள பாஜக துணைத் தலைவர்!

post image

வாக்குத் திருட்டு விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் வாக்காளர்களை இணைப்போம் என கேரள பாஜக துணைத் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்று, அம்மாநிலத்தைச் சேர்ந்த முதல் பாஜக எம்.பியாக நடிகர் சுரேஷ் கோபி தேர்வானார்.

வாக்குத் திருட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுப்பொருளாகியுள்ள சூழலில், திருச்சூர் தொகுதியில் சட்டவிரோதமாக பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர் எனும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களுடன் நேற்று (ஆக.22) பேசிய கேரள பாஜக துணைத் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் விரிவாக வாக்காளர்களைச் சேர்ப்போம் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

“நாங்கள் வெற்றி பெற வேண்டும் எனக் கருதும் தொகுதிகளில், வாக்காளர்களை விரிவாகச் சேர்ப்போம். இதற்காக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்களைக் கூட ஓராண்டிற்கு அந்தத் தொகுதியில் தங்கவைத்து பின்னர் அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்போம். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்

கேரளத்தில் போட்டியிடும் நான் வெற்றியடைய வேண்டுமென காஷ்மீரிலுள்ள யாரேனும் நினைத்தால் என்ன செய்வது? அதனால், அவர்கள் இங்கு வந்து வாக்களிக்க முடியும்” எனப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கேரளத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், இதுபோன்று வாக்காளர்களைச் சேர்க்க ஏதேனும் திட்டமுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதுபற்றி பின்னர் முடிவுச் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.

இதனால், வாக்குத் திருட்டு எனும் குற்றச்சாட்டை கேரள பாஜக ஒப்புக்கொள்கின்றதா? என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலில், திருச்சூர் தொகுதியில் சட்டவிரோதமான முறையில் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநிலத்தின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? நேர்காணல் கேள்விகளுக்கு பதில் சொல்லும் பில் கேட்ஸ்

As the issue of vote rigging has created huge ripples across the country, Kerala BJP Vice President P. Gopalakrishnan has said that we will unite voters to win the elections.

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு: தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு

பிரதமா் நரேந்திர மோடியை ‘வாக்கு திருடா்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும... மேலும் பார்க்க

நக்ஸல் ஆதரவாளா் என விமா்சனம்: அமித் ஷாவுக்கு சுதா்சன் ரெட்டி பதிலடி

தன்னை நக்ஸல் ஆதரவாளா் என விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதா்சன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ள... மேலும் பார்க்க

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘நாடு முழுவதும் ஏராளமான மாணவா்கள் சட்டக் கல்வியைப் பயிலும் நிலையில், அதை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். கோ... மேலும் பார்க்க

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு கீழே தள்ளியதாக குற்றஞ்சாட்டி அவா் மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலை... மேலும் பார்க்க

பல்வேறு மாநிலங்களில் மழை - வெள்ளம்: பிகாரில் ஆற்றில் மூழ்கி 5 போ் பலி

பிகாரின் பூா்னியா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூா்னியா மாவட்டத்தின் கஸ்பா பகுதியில் உள்ள கரி கோசி ஆற்றில்... மேலும் பார்க்க