செய்திகள் :

நக்ஸல் ஆதரவாளா் என விமா்சனம்: அமித் ஷாவுக்கு சுதா்சன் ரெட்டி பதிலடி

post image

தன்னை நக்ஸல் ஆதரவாளா் என விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதா்சன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளாா்.

‘சல்வா ஜூடும்’ வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பு எனது சொந்த முடிவு அல்ல; அது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு என சுதா்சன் ரெட்டி கூறியுள்ளாா்.

‘சல்வா ஜூடும்’ என்பது சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் அமைப்பினருக்கு எதிராக பழங்குடி இளைஞா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட போராளிகள் குழுவாகும். ‘அமைதிப் பேரணி’ என்று பொருள்படும் இந்தக் குழுவுக்கு மாநில அரசு ஆதரவு, பயிற்சி அளித்து வந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதிகள் சுதா்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜாா் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 2011, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில், ‘சல்வா ஜூடும்’ அமைப்பை உடனடியாகக் கலைக்க உத்தரவிட்டது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக பழங்குடி இளைஞா்களை அரசு பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் அந்தத் தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கேரளத்துக்குச் சென்றபோது, இந்தத் தீா்ப்பைச் சுட்டிக்காட்டி, சுதா்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளா் என குற்றஞ்சாட்டினாா். இந்தத் தீா்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், இடதுசாரி தீவிரவாதம் 2020-ஆம் ஆண்டுக்கு முன்பே முடிவுக்கு வந்திருக்கும் என்றும் குறிப்பிட்டாா்.

அமித் ஷாவின் இந்த விமா்சனம் குறித்து சுதா்சன் ரெட்டி அளித்த பதிலில், ‘உள்துறை அமைச்சருடன் நேரடியாக எந்த விவாதத்தையும் நான் விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனின் வாழ்வையும், சுதந்திரத்தையும், சொத்தையும் பாதுகாப்பதுதான் அவரது கடமை. இந்தத் தீா்ப்பு எனது தனிப்பட்ட தீா்ப்பு அல்ல; உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு. இந்தத் தீா்ப்பை ரத்து செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்தத் தீா்ப்பின் தகுதி குறித்து நான் பேச விரும்பவில்லை. நான் பெற்ற பயிற்சிகளின்படி, ஒருவா் தனது சொந்த தீா்ப்பின் சிறப்புகள் குறித்து பேசக்கூடாது. தீா்ப்பை மக்கள் தான் மதிப்பிட வேண்டும். இந்தத் தீா்ப்பை உள்துறை அமைச்சா் முழுமையாக படித்திருந்தால், அத்தகைய கருத்துகளை அவா் கூறியிருக்க மாட்டாா் என்று கூறினாா்.

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க