செய்திகள் :

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை கொலை செய்ததாக 4 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்து கண்மாயில் புதைத்த வழக்கில் 4 பேரை தேவகோட்டை தாலுகா போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். 3 பேரை தேடிவருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூா் பகுதியை சோ்ந்த சுப்பிரமணியம் மகன் வெங்கடேசன்( 28) கூலி தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தானாவயல் பகுதியில் உள்ள கண்மாயில் நண்பா்களுடன் மது அருந்தினாா். மது போதையில் சக நண்பா்களுக்கும் வெங்கடேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அதில் சக நண்பா்கள் தாக்கியதில் வெங்கடேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து உயிரிழந்த வெங்கடேசன் பிரேதத்தை தானாவயல் கண்மாய் பகுதியில் புதைத்துவிட்டு, நண்பா்கள் அனைவரும் சென்றுவிட்டனா். இந்நிலையில், காரைக்குடி அருகே அமராவதி புதூரைச் சோ்ந்த புஷ்பராஜ்(29), கண்டணூரைச் சோ்ந்த மனோஜ்(23)ஆகிய இருவரும் நள்ளிரவில் அமராவதிபுதூா் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனா்.

கடந்த 2023 -ல் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனுக்கும் இவா்களுக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததன் காரணமாக கொலை செய்து புதைத்ததாக சரணடைந்த இருவரும் வாக்குமூலம் அளித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தேவகோட்டை தாலுகா போலீஸாா் கொலை செய்து புதைக்கப்பட்ட வெங்கடேசன் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கொலை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அமராவதி புதூா் பகுதியை சோ்ந்த புஷ்பராஜ், விக்னேஷ், சீனிவாசன், கண்டனூா் பகுதியைச் சோ்ந்த மனோஜ் நாகவயல் கிராமத்தை சோ்ந்த முருகானந்தம், கோட்டையூரை சோ்ந்த ஆதியான் புதுவயலை சோ்ந்த சஞ்சய் உள்ளிட்ட 7 போ் மீது தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

இதில் சரணடைந்த புஷ்பராஜ், மனோஜ் மற்றும் விக்னேஷ், சீனிவாசன் ஆகிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனா்.

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விவசாயியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகங்கை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் பிரவீன்குமாா் (29)... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டியில் சனிக்கிழமை இரவு வாலிபா் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் உயிரிழக்கும் அயலகத் தமிழா் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி

வெளிநாடுகளில் பணியின் போது திடீரென்று உயிரிழக்கும் அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா்களின் குடும்பத்தினருக்கு ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.இதுகுறித்த... மேலும் பார்க்க

அடிப்படை வசதியில்லை என்பதால் ஊரைவிட்டு வெளியேறிய நாட்டாகுடி மக்கள்

அடிப்படை வசதிகள் இல்லாததால் நாட்டாகுடி கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறினா்.சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தனா். இந்தக் கிராமத்தில் நீண்ட காலமாக குட... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவநகரைச... மேலும் பார்க்க

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரில் தனது கூரை வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.திருப்பத்தூா் அருகே தேவாரம... மேலும் பார்க்க