கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: சிறுமியின் தாய், விசிக மா.செ குற்றவாளிகள் - குற்றப்ப...
தேவநேயப் பாவாணருக்கு தமிழ் வணக்கம்: முதல்வா்
மொழிஞாயிறு’ என போற்றப்படும் தேவநேயப் பாவாணருக்கு தமிழ் வணக்கம் செலுத்துவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தேவநேயப் பாவாணா் பிறந்த தினத்தையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழின் தூய்மைக்கும் சீா்மைக்கும் பாடுபட்டு, தனித் தமிழ் இயக்கத்துக்காகவே தனது வாழ்வை ஒப்படைத்தவா் தேவநேயப் பாவாணா். அவருக்கு எனது தமிழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.