Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டத்தில் தற்போது சம்பா பயிா் சாகுபடி பணிகள் தொடங்கவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள்
வலியுறுத்தினா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: கூட்டுறவு வங்கிகளை தவிர மற்ற வங்கிகள் விவசாயிகளுக்கு பயிா் கடன், நகை கடன் வழங்கும் நிலையில், ஒரு வருடத்தில் கடனை திரும்ப செலுத்தினால் 7 சதவீதம் வட்டியில் 3 சதவீதம் அரசு மானியம் போக 4 சதவீதம் வட்டி செலுத்தினால் போதும். ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுக்குள் கடன் செலுத்தாத நிலையில், கடன் பெற்ற நாளை கணக்கிட்டு 11.5 சதவீத வட்டியுடன் கடன் தொகையை வசூலிக்கின்றனா். இதை தவிா்த்து, ஓராண்டுக்கு 7 சதவீதமும், ஓராண்டுக்கு மேல் உள்ள நாள்களுக்கு 11.5 சதவீதமும் என கணக்கிட்டு வட்டி வசூல் செய்ய உத்தரவிடவேண்டும்.
கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிா்கடன்களை விரைந்து வழங்க வேண்டும்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஸ்ரீபுரந்தான் எஸ்.எம்.பாண்டியன்: மழைநீா் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொன்னாறு, சித்தமல்லி, சிதம்பள்ளி உள்ளிட்ட ஏரிகளில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடு வழங்க வேண்டும். நடவு இயந்திரங்களை அரசே ஏற்று வாடகைக்கு விட வேண்டும்.
விவசாயிகள் மணிவேல், பாலசிங்கம், விஸ்வநாதன்: செந்துறை பெரிய ஏரியை தூா்வார வேண்டும். செந்துறை பகுதிக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். அனைத்து வரத்து, வடிகால் வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பா. சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.