செய்திகள் :

``தோல்வி பயத்தில், காய்கறி விற்பதுபோல் கூவிக்கூவி உறுப்பினர் சேர்க்கிறது திமுக'' - அண்ணாமலை சாடல்

post image

திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து, அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து தொடக்க காலத்தில் திமுக-வின் முரசொலி நாளிதழில் அசிங்கப்படுத்தி கார்ட்டூன் மற்றும் செய்தி வெளியிட்டுள்ளனர். தற்போது, காமராஜர் குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியது குறித்து எதிர்ப்புகள் எழும்பி உள்ளது.

பாஜக அண்ணாமலை
பாஜக அண்ணாமலை

ஆனால், அதை பெரிதுபடுத்த வேண்டாமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகிறார். இதுகுறித்து கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வாய் கூட திறக்கவில்லை. அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செயலிழந்துள்ளது. எப்படியாவது திமுக கூட்டணியில் நீடித்தால்போதும் என்ற நிலைக்கு காங்கிரஸ் கட்சி சென்றுவிட்டது.

திமுக ஆட்சியில் மக்கள் காவல் துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். அதற்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கங்கள் அதிகரித்துள்ளதே சாட்சியாக இருக்கிறது.

திமுக-வில் உறுப்பினராக சேர்ந்தால் மட்டும்தான் அரசு கொடுக்கும் 1000 ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும் என்று மக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தி சேர்க்கின்றனர்.

5 முறை ஆட்சியில் இருந்த கட்சி காய்கறி வியாபாரம் செய்வதுபோல கூவிக்கூவி உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. இதிலிருந்தே அவர்களின் தோல்வி பயம் தெரிகிறது." என்றார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் நிலைமைதான் தமிழகத்தில் உள்ள காவலர்களின் நிலைமையாக உள்ளது. அவரின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர குற்றஞ்சொல்லியதற்காக டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. காமராஜர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா? இல்லையா என்றுகூட தெரியவில்லை. அப்படியொரு கட்சி தமிழ்நாட்டில் இருப்பதாக தெரியவில்லை" என்றார்.

``RSS, CPM -க்கு மக்கள் குறித்த புரிந்துணர்வு, அன்பு இல்லை..'' - ராகுல் காந்தி கடும் தாக்கு

கேரள மாநிலம் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைந்து ஓராண்டை முன்னிட்டு அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

NDA கூட்டணியில் மதிமுக - BJP உடன் டீல்? | TVK - ADMK கூட்டணி? - EPS பதில்| Imperfect Show 18.7.2025

* "உயர் அதிகாரிகள் என்னை டார்ச்சர் செய்கின்றனர், 4 மாதமாக எனக்கு சம்பளம் போடவில்லை" -மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன்? * மயிலாடுதுறை எஸ்.பி தரப்பில் கொடுத்த விளக்கம்?* டிஎஸ்பி சுந்தரேசன் மீது... மேலும் பார்க்க

மதுரை: ``மாநகராட்சி வரி முறைகேடுட்டில் தமிழக அரசு வெளிப்படையாக இல்லையே ஏன்?'' - சு.வெங்கடேசன் கேள்வி

"மிகப்பெரிய நிறுவனங்கள் கூட வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தான் முதலில் பேசியது.." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கண்தானம் செய்யலாமா?

Doctor Vikatan: கண்களில் ஏதோ காரணத்துக்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், கண்தானம் செய்யலாமா... உதாரணத்துக்கு, லேசர், ரெட்டினா அறுவை சிகிச்சை, கேட்டராக்ட் போன்றவற்றுக்குப் பிறகு கண் தானம் செய்யலாமா... கண... மேலும் பார்க்க

அரிதான ரத்த வகையினர் அஞ்ச வேண்டுமா? - நிபுணர் விளக்கம்!

நம்மில் பலருக்கும் A, B, AB, O என நான்கு ரத்த வகைகளும், அவற்றில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இருபிரிவுகளும்பற்றியும் தெரியும். இன்னும் சிலருக்கு பாம்பே ரத்தவகைபற்றியும் தெரிந்திருக்கும். ஆனால், இதுவரை உல... மேலும் பார்க்க

``விசிக மீது சந்தேகத்தை எழுப்பி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கிறார்..'' - எடப்பாடி குறித்து திருமா

‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் த... மேலும் பார்க்க