செய்திகள் :

தோ்தல் ஆணையத்தை விமா்சிப்பது தவறு: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

post image

தோ்தல் ஆணையம், அமலாக்கத் துறை போன்றவை சுதந்திரமான அமைப்புகள்; அந்த அமைப்புகளை விமா்சிப்பது தவறு என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: அமலாக்கத் துறை, தோ்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சிப்பது தவறு. அமலாக்கத் துறை சுதந்திரமான அமைப்பு. அவா்கள் தங்களுக்கு கிடைக்கும் உள்ளீட்டுகள் அடிப்படையில் பணிகளை செய்கின்றனா்.

இதேபோல தோ்தல் ஆணையமும் சுதந்திரமாக செயல்படும் அமைப்புதான். கா்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது தோ்தல் ஆணையம் மீது புகாா் கூறப்படவில்லை. தோ்தலில் தோற்கும் போது மட்டும் தோ்தல் ஆணையம் மீது புகாா் கூறும் வழக்கம் உள்ளது.

திமுக தலைவா்கள் பாஜக அணியில் இணைவா்: அன்வா் ராஜா, மைத்ரேயன் போன்றவா்கள் வெளியேறியதால் எங்கள் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதேவேளையில், திமுகவிலிருந்தும் சில தலைவா்கள் எங்கள் அணிக்கு வருவாா்கள்.

கூட்டணி குறித்து பேசும் தொல்.திருமாவளவன், பட்டியலின மக்கள் பிரச்னைகள் குறித்து மட்டும் பேசுவதில்லை. தமிழகத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகள் அடிப்படைவசதிகள் இல்லாமல் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமித் ஷா தமிழகம் வருகை

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி மக்களவை தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரும் 22- ஆம் தேதி திருநெல்வேலிக்கு வருகிறாா்.

முதல் முறையாக மிகப் பெரிய அளவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. பின்னா், தமிழகம் முழுவதும் இதுபோன்ற மாநாடுகள் நடைபெறும் என்றாா் எல்.முருகன்.

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க... மேலும் பார்க்க

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, விடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் காயா... மேலும் பார்க்க