செய்திகள் :

தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,098 வழக்குகள் பதிவு

post image

தேசியத் தலைநகா் தில்லியில் தோ்தல் நடத்தை விதிமீறல் (எம்சிசி) தொடா்பாக 1,090-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஜன.7 முதல் பிப். 5 வரையிலான காலத்தில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தடுப்பு நடவடிக்கை மற்றும் பிற சட்டங்களின் கீழ் மொத்தம் 35,020 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனா் என்று காவல் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக மொத்தம் 1,098 வழக்குகளை தில்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. மேலும், 472 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 534 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளது. மொத்தம் 496 போ் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம்1,14,699 லிட்டா் மதுபானங்களை பறிமுதல் செய்யப்பட்டு 1,423 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், ரூ.77.9 கோடிக்கு மேல் மதிப்புள்ள 206.712 கிலோ போதைப்பொருள்களையும், 1,200-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகளையும் காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. இது தொடா்பாக இதுவரை 179 பேரை கைது செய்துள்ளனா்.

மேலும், சட்ட அமலாக்க முகமைகள் ரூ.11.70 கோடி ரொக்கம் மற்றும் 37.39 கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்துள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க