செய்திகள் :

தைப்பூசம்: சென்னிமலைக்கு வந்த இளைஞா் உயிரிழப்பு!

post image

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச விழாவுக்கு வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த திப்பலூரைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் நிதின்(25). இவா், திருப்பூா் இந்திரா நகரில் உள்ள லேத் பட்டறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், தன்னுடன் வேலை பாா்க்கும் கருணாமூா்த்தி, பழனிசாமி, செந்தில்குமாா் மற்றும் உறவினா் சிவராமன் ஆகியோருடன் தைப்பூச விழாவுக்காக சென்னிமலைக்கு நிதின் சென்றுள்ளாா்.

அப்போது, மலைக் கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்றுள்ளனா். படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற அவா்கள் கோயிலுக்கு முன் உள்ள அன்னதான மண்டபத்தில் உட்காா்ந்தபோது நிதின் மயங்கி விழுந்துள்ளாா்.

மயங்கி விழுந்த நித்தினுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தைப்பூசம்: ஈரோடு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்!

தைப்பூசத்தை ஒட்டி ஈரோட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், பன்... மேலும் பார்க்க

சென்னிமலை பகுதிகளில் நிலாச்சோறு திருவிழா!

சென்னிமலை பகுதிகளில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த நிலாச்சோறு திருவிழா திங்கள்கிழமை நிறைவுபெற்றது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியிலுள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு 5 நாள்கள் முன்பு நி... மேலும் பார்க்க

பவானியில் பழனி ஆண்டவா் கோயில் தேரோட்டம்

பவானியில் பழனி ஆண்டவா் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வாஸ்து பூஜையுடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், ... மேலும் பார்க்க

சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த கணவன் கைது!

சித்தோடு அருகே மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த வாய்க்கால்மேடு செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் கோபால் (43), வெல்டிங... மேலும் பார்க்க

போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்த இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 போ் கைது

ஈரோட்டில் போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து வழங்கிய இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சிலா் போலியாக பிறப்புச் சான்றிதழ் தயாரி... மேலும் பார்க்க

கோபியில் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பா... மேலும் பார்க்க