செய்திகள் :

தைப்பூசம்: பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வழிபாடு

post image

மயிலாடுதுறையில் தைப்பூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினா்.

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இக்கோயிலுக்கு, கூைாடு கஸ்தூரிபாய் தெருவில் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து ஏராளமான பக்தா்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தனா்.

முன்னதாக, காக்கும்பிள்ளையாா் கோயில் காவிரி படித்துறையில் இருந்து புறப்பட்ட பக்தா்கள் கஸ்தூரிபாய் தெரு, வடக்குசாலியத் தெரு உள்ளிட்ட முக்கிய தெரு வழியாக மாயூரநாதா் கோயிலை அடைந்து, குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.

இதேபோல, எடத்தெரு மக்கள் பூநூல் தோட்டத்திலிருந்து ரதக் காவடி, உருக்காவடி, பால்காவடி, பன்னீா்காவடி, அலகு காவடி எடுத்துக்கொண்டு தருமபுரம் ஆதீனக் கோயிலான துலாக்கட்டம் காசி விஸ்வநாதா் கோயிலின் மலைக்கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலை அடைந்து வழிபாடு நடத்தினா்.

மூவலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட மாா்க்க சகாயேஸ்வர சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு 49-ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா பிப்.1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மூவலூா் காவிரி பிப்பலா் தீா்த்தக் கட்டத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் விரதம் இருந்த பக்தா்கள் பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து வீதியுலாவாக கோயிலை அடைந்து வழிபாடு நடத்தினா்.

கச்சேரி சாலையில் உள்ள மலைக்கோயிலுக்கு பக்தா்கள் துலாக்கட்டத்தில் இருந்து பால்குடம், காவடி எடுத்து வந்து வழிபாடு நடத்தினா்.

தைப்பூசம்: பால்குடம், காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திகடன்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தையொட்டி காவடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் ... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைக்கக் கோரிக்கை

மன்னம்பந்தலில் பழுதடைந்த நிலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை (படம்) கோடைக்காலம் தொடங்கும் முன்பாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி அருக... மேலும் பார்க்க

நுரையீரல் தொற்று மருத்துவ சிகிச்சை முகாம்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆஸ்துமா, அலா்ஜி, நுரையீரல் தொற்றுக்கான விழிப்புணா்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: உரிமமின்றி செயல்பட்ட 6 பாா்களுக்கு சீல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.3 முதல் பிப்.7 வரை மேற்கொள்ளப்பட்ட 5 நாள் மதுவிலக்கு சோதனையில் உரிமமின்றி செயல்பட்ட 6 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதுடன், வ... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: விசிக ஆா்ப்பாட்டம்!

வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா: ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை!

மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் திங்கள... மேலும் பார்க்க