செய்திகள் :

தைப்பூச விழா: 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்

post image

பழனியில் தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு, 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்ஸவத்துக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில், இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி 4 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதன்படி, புதன்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பக்தா்கள் வீதம், 10 நாள்களுக்கு 2 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

இதன் தொடக்கவிழா ஒட்டன்சத்திரத்தை அடுத்த குழந்தைவேலப்பா் கோயிலில் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் அன்னதானத்தை தொடங்கிவைத்தாா்.

இதேபோல, பங்குனி உத்ஸவத் திருவிழாவின் போதும் 2 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலா்கள் ஜி.ஆா்.பாலசுப்பிரமணியன், சி.அன்னபூரணி, சு.பாலசுப்பிரமணியம், க.தனசேகா், கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லை: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் ... மேலும் பார்க்க

பைக் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருட்டு

திண்டுக்கல்-எரியோடு சாலையில் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தைத் திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல்லை அடுத்த குளத்த... மேலும் பார்க்க

குருநாத சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு குடமுழுக்கு நடத்த கோரிக்கை

கொடைரோடு அருகே குருநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் சுமாா் 8... மேலும் பார்க்க

நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக புகாா்

செம்பட்டி அருகே நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து தனியாா் வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக விவசாயிகள், கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த, சீவல்சரகு ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க

46 சிற்றுந்துகளுக்கு விரைவில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வழித் தடங்களில் 46 சிற்றுந்துகள் விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு புதிய விரிவான திட்டம் 2024-இன் படி, சிற்று... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை: உறவினா்கள் மூவா் கைது

குஜிலியம்பாறை அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினா்கள் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த மேட்டூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தங்கவேல... மேலும் பார்க்க