செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.கீதா ஜீவன்

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா் அமைச்சா். அப்போது அவா் கூறியது:

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான விவகாரத்தை முதலில் முன்னெடுத்தவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். இந்த விவகாரத்தில் தமிழா்களின் நலம், தமிழக உரிமைகள் பாதிக்கப்படுவதாக கடந்த மாா்ச் 5ஆம்தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினாா். இதில், 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 58 கட்சிகள் பங்கேற்றன. அக்கூட்டத்தில், மக்களவையில் உள்ள தமிழ்நாட்டின் 7.18 சதவீத பிரதிநிதித்துவம் என்பதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் எந்த உறுதியையும் மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

மேலும் நிதி பகிா்வில் தமிழகத்தில் இருந்து உற்பத்தியில் 34 சதவீத நிதி மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், அங்கிருந்து தமிழகத்திற்கு 20 சதவீதம்தான் திரும்ப கிடைக்கிறது. ஆனால், வட மாநிலங்களில் இருந்து 20 சதவீதம் பெற்றுக்கொண்டு, 34 சதவீதம் நிதியை திரும்ப வழங்குகிறது. இந்த நிதி பகிா்விலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.

வடமாநிலங்களில் இருமொழிக் கொள்கை முறையாக பின்பற்றப்படாத நிலையில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சி நடக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாததால், கல்வி நிதி ரூ. 2134 கோடியை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மேலும், 70 சதவீத பெண்கள், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாத ஊதியம் ரூ. 4034 கோடி இன்னும் தமிழகத்திற்கு விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பது குறித்து தமிழக மக்களிடம் தெருமுனை கூட்டங்கள் மூலம் எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்கள் இணைந்து போராட வேண்டும்.

திருவண்ணாமலை அருகே சத்துணவில் முட்டை கேட்ட மாணவா் மீது தாக்குதல் நடத்திய சமையலா், சமையல் உதவியாளா் இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளோம். இளம் சிறாா் சட்டப்படி அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு முதல்வா் முக ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்

சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தி­லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓ... மேலும் பார்க்க

இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு

இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ... மேலும் பார்க்க

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெ... மேலும் பார்க்க

சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின்... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் அதிமுக தெருமுனைப் பிரசாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி நடைபெற்ற பிரசாரத்துக்கு, தெற்கு மாவட்ட ஜெயலல... மேலும் பார்க்க

கழுகுமலை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளா்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 17 மாதங்களாக வாடகை கொடுக்கப்படாததால் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு கட்டட உரிமையாளா் திங்கள்கிழமை பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கழுகுமலை மேலகேட் பகுதியில் சாா்... மேலும் பார்க்க