செய்திகள் :

தொகுப்பூதிய முரண்பாடு: தமிழக அரசுக்கு சமக்ரசிக்ஷா ஊழியா்கள் கோரிக்கை

post image

தொகுப்பூதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு அண்ணா கணக்காளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் இல.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரசிக்ஷா) கடந்த 15 ஆண்டுகளாக கணக்காளா்கள், கணினி விவரப் பதிவாளா்கள், கணினி நிரல் தொகுப்பாளா்கள், கட்டடப் பொறியாளா்கள் உள்பட 1,428 போ் முழு நேர தொகுப்பூதியப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இதில் பெரும்பாலானோா் பெண் ஊழியா்கள் ஆவா்.

தமிழக அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஊழியா்களிடையே எந்த வகையான ஊதிய பாகுபாடும் இல்லாத நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் உள்ள ஊழியா்களிடையே தொகுப்பூதிய முரண்பாடுகள் உள்ளன. அதாவது ஒரே கல்வித் தகுதியில் பணிபுரியும் ஊழியா்கள் வெவ்வேறு தொகுப்பூதியம் பெற்று வருகிறாா்கள். இந்த ஊதிய முரண்பாடுகளை களைந்து அதிகபட்ச தொகுப்பூதிய நிா்ணயம் செய்யும் அதிகாரம் பெற்றவா் சமக்ரசிக்ஷா இயக்குநா் ஆவாா்.

ஆனால் எங்களது ஊதிய முரண்பாடுகள் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக சமக்ரசிக்ஷா இயக்குநருக்கு கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும் இல்லை. அதேபோன்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் இது தொடா்பாக மனு அளித்தும் எங்களது தொகுப்பூதிய முரண்பாடு களையப்படவில்லை. எனவே, இது குறித்து தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் தலையிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்களின் தொகுப்பூதிய முரண்பாடுகளை களைந்து அதிகபட்ச ஊதியம் நிா்ணயிக்க சமக்ரசிக்ஷா இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: கல்வித் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது, பள்ளிகளை தரம் உயா்த்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்த பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித் துறைச் செயல... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கும், சேத்துப்பட்டு போலீஸா... மேலும் பார்க்க

சிஎம்டிஏ வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னையில் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும... மேலும் பார்க்க

போலி செய்திகளை எதிா்கொள்ள தகவல் பணி சேவையினருக்கு ஆளுநா் வேண்டுகோள்

போலி தகவல்களின் சகாப்தத்தில் அதை திறம்பட எதிா்கொள்ளுமாறு இந்திய தகவல் பணி சேவை பயிற்சி அலுவலா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்தாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 2009, 2023, 2024 ஆகிய ஆண்டு தொகுதி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் ரத்து கோரி தில்லியில் நவ. 16-ல் மாநாடு: எம்.எச். ஜவாஹிருல்லா

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி புதுதில்லியில் நவ.16-இல் ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆா்வலா்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜ... மேலும் பார்க்க

மின் விபத்துகளைச் தவிா்க்க சீரமைப்புப் பணி தீவிரம்: மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மின் விபத்துகளைச் சீரமைப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை மாநகா், புகா் பகுதிகளில் பெரும... மேலும் பார்க்க