செய்திகள் :

தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?

post image

காஸா நகரத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன.

காஸாவில் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட போர், 2 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. காஸாவில் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் இறக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஸாவில் உள்ள மோசமான சூழ்நிலையால் அங்குள்ள மக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர்.

மேலும் சமீபமாக இஸ்ரேல் படைகள், காஸா மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. நேற்று காஸாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி சமீபத்திய வாரங்களில் சுமார் 2 லட்சம் பேர் காஸாவை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு காஸாவில் குறிப்பிட்ட பகுதி 'பாதுகாப்பானது' என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் வடக்கு காஸாவில் இருந்து பலரும் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இதனிடையே காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காஸா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் பயங்கரவாதம் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்று அதிகாலை முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Israeli military says 200,000 people forced out of Gaza City: Reports

பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

கத்தார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், ஹமாஸ் சிறைப் பிடித்துள்ள பிணைக் கைதிகளுக்கான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொன்றுவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் ... மேலும் பார்க்க

உலகப் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் சரிவு! முதலிடத்தில் யார்?

உலகின் முதல் பணக்காரராக லேரி எலிசன் முன்னேறியுள்ளார்.உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நேற்றுவரையில் முதலிடம் வகித்து வந்த எலான் மஸ்க், ஒரே நாள் இரவில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! அதிகாரியின் வீட்டை இடித்த மர்ம நபர்கள்!

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்குவாவில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் இருண்ட காலம்: சார்லி கிர்க் கொலை பற்றி டிரம்ப்

சமூக ஆர்வலரும், அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டது கொடூரமான படுகொலை என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்காவின் திரு... மேலும் பார்க்க

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை: கொலையாளி யார்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடையவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சம்பவ இடத்தில், சந... மேலும் பார்க்க

டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் என்று அறியப்படும் சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 31.சில மாதங்களுக்கு முன்பு, கிர்க்கின் மனைவி எரி... மேலும் பார்க்க