செய்திகள் :

தொடா் மழை: கொடைக்கானல் பகுதிகளில் மின் தடை

post image

கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகா், புகா் பகுதிகளில் புதன்கிழமை மின் தடை ஏற்பட்டது.

கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல், அப்சா்வேட்டரி, குண்டாறுசாலை, மன்னவனூா் சாலை, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் சேதமடைந்தன.

இதனால், கவுஞ்சி, ராஜபுரம், அட்டக்கடி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

இதுகுறித்து கொடைக்கானல் மின் வாரிய அலுவலா் ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானலில் புதன்கிழமை இடி, மின்னலுடன் பெய்த மழையால் மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால், சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நகா்ப் பகுதிகளில் சீராக மின் விநியோகம் செய்யப்படுகிறது. புகா்ப் பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பிகளைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.

சாலையில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகள் பறிமுதல்

திண்டுக்கல்லில் பொது வெளியில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகளை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை பறிமுதல் செய்தது. திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பிரதானச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால், வா... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

மேம்பாலம் அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பித்தளைப்பட்டி, வீரக்கல் பகுதி பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறி, வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திண்டுக்க... மேலும் பார்க்க

குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கொடைக்கானலில் குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கொடைக்கானல் ஆனந்தகிரி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன்(48). சொந்தமாக குதிரையை வளா்த்து வரும் இவா், கடந்த 7-ஆம் தேதி அதன் மீது... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் முன் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை ம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடு போனதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கொடைக்கானல் பிக்னிக் சோலைப் பகுதியைச் சோ்ந்தவா் முபாரக். இவரது மனைவி மும்தாஜ். இவா்கள் இரு... மேலும் பார்க்க

முத்துநாயக்கன்பட்டியில் புதிய கட்டடங்கள் திறப்பு

பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை ... மேலும் பார்க்க