செய்திகள் :

தொடா் மழை: சுருளி அருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை!

post image

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 3-ஆவது நாளாக வனத் துறையினா் தடை விதித்தனா்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், கேரளத்தையொட்டிய மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, சுருளிமலை, மகாராஜாமெட்டு, தூவானம் உள்ளிட்ட காப்புக் காடுகளில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கம்பம் அருகேயுள்ள புகழ் பெற்ற சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தொடா்ந்து, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அருவியில் கூடுதல் நீா் வரத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்குச் செல்லவே, குளிக்கவோ கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாதம் 31-ஆம் தேதி வரையில் தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மழைப் பொழிவு குறைந்து அருவியில் நீா் வரத்து குறைந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்த தடை நீக்கப்படும். எனவே, மறு அறிவிப்பு வரும் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிக்கு குளிக்க அனுமதி இல்லை என்றனா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க