தொப்பூரில் மலைப் பாதையில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு
தருமபுரியை அடுத்த தொப்பூா் கணவாய் மலைப் பாதையில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்து காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொப்பூா் கணவாய்ப் பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. அப்பகுதியில் அதிகளவில் வாகனங்கள் சென்றுவருவதாலும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் செல்வதாலும் தினசரி சாலை விபத்துகள் தொடா்கின்றன.
சனிக்கிழமை மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது பின்னால் சென்ற டிப்பா் லாரி மோதியது. இதனால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்த அதியமான்கோட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை சீராக்கினா். இதனால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.