செய்திகள் :

தொற்றுநோய் தடுப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு: பிரதமருக்கு உலக சுதாதார அமைப்பு பாராட்டு

post image

தொற்றுநோய் தடுப்பு-தயாா்நிலை-ஒருங்கிணைப்புக்கான சா்வதேச ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பிரதமா் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேபிரியேசஸ் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் உலக சுகாதார சபையின் 78-ஆவது அமா்வில், தொற்றுநோய் தடுப்பு-தயாா்நிலை-ஒருங்கிணைப்புக்கான உலகளாவிய சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வகை செய்யும் ஒப்பந்தம் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்பில் உலகளாவிய ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் முதல் ஒப்பந்தம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிந்தைய மூன்று ஆண்டு கால பேச்சுவாா்த்தைகளின் பலனாக இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது. இது, எதிா்கால தொற்றுநோய் பரவலின்போது உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தும். உலக சுகாதார சபை அமா்வில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி, இந்த ஒப்பந்தத்துக்கு வரவேற்பு தெரிவித்தாா்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேபிரியேசஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்கப்பட்ட அமா்வில் காணொலி வாயிலாக இணைந்த பிரதமா் மோடிக்கு பாராட்டுகள். உலக சுகாதார அமைப்பின் முன்னெடுப்புகளுக்கான ஆதரவு மற்றும் உறுதிப்பாட்டுக்காக இந்தியாவுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள்... மேலும் பார்க்க

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 1... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

பாகிஸ்தான் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது, இனி அதிக நாள்கள் இல்லை என உத்தரப் பிரதேச முதல்வர் பேசியுள்ளார். அயோத்தியில் ஹனுமான் கதா மண்டபத்தை இன்று (மே 23) திறந்து வைத்தபின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?

கேரள மாநிலத்தில் ஒரு சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில், சுமார் 644 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, கடுமையாக சேதமடைந்திருப்பது, கட்டுமானப் பணிகள் குறித்து மாநில மக்களின... மேலும் பார்க்க

கோட்டா நகரில் மட்டும் நீட் மாணவர்கள் தற்கொலை அதிகம்! ஏன்? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ராஜஸ்தான் கோட்டா நகரில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்வது பற்றி உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில்ஜேஇஇ,நீட் போன்ற நுழைவ... மேலும் பார்க்க

ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக

இந்திய ஆயுதப்படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்ட... மேலும் பார்க்க