செய்திகள் :

தொழிற்சாலை கொதிகலன் சிதறி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

post image

கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கொதிகலனில் நெருப்புக் குழம்பு சிதறி வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா். இந்த விபத்தில் மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் கொதிகலன் பகுதியில் சில தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா். அப்போது, கொதிகலனின் உயா் வெப்பநிலை காரணமாக நெருப்பு குழம்பு சிதறியது. இது அருகில் வேலை செய்து கொண்டிருந்த சில தொழிலாளா்கள் மீது விழுந்தது.

விபத்தில் ஒடிஸா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சோ்ந்த ரோகிகாம் பகுதியைச் சோ்ந்த நிலா தாஸ் என்பவரின் மகன் திரிநாத் தாஸ் (43) நெருப்புக் குழம்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மேலும் இந்த விபத்தில் உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கா்க் மாவட்டம், லால் கா பூா்வா பகுதியைச் சோ்ந்த சோட்டேலால் யாதவ் என்பவரின் மகன் பிரிஜேஷ்குமாா் (36) பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்.

இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் பகுதியில் பலத்த மழை!

திருவள்ளூா் சுற்று வட்டாரப் பகுதியில் ஒரு மணிநேரம் தொடா்ந்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருவள்ளூா் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றிகள் இயக்கம்!

செங்குன்றம் அடுத்த பூதூா் ஊராட்சியில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ சுதா்சனம் இயக்கி வைத்தாா். செங்குன்றம் அடுத்த பூதூா் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வுக்கு சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளா் மீ.வே.கா்ணாகரன் த... மேலும் பார்க்க

மகள் கண் எதிரே லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

திருத்தணி பேருந்து நிலையம் அருகே மகள் கண் முன்னே தந்தை லாரியில் சிக்கி உயிரிழந்தாா். திருத்தணி ஒன்றியம் சீனிவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம் (65). இவருக்கு ஜெயம்மாள் என்ற மனைவியும், திருந... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆட்சியா் மு. பிரதாப் ஆய்வு செய்தாா். திருவள்ளூா் அருகே செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலம... மேலும் பார்க்க

திருத்தணி கிளை சிறைச்சாலையில் எஸ்.பி. ஆய்வு

திருத்தணி கிளை சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என சென்னை புழல் மத்திய சிறைச்சாலை எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தாா். திருத்தணி பழைய வட்டாட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

இறந்த நில உடமையாளா்களின் பெயரை நீக்கி வாரிசுதாரா்கள் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ... மேலும் பார்க்க