சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
தொழிலதிபா் தற்கொலை
கடன் பிரச்னை காரணமாக, மேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு தேநீா் கடை முன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந்தாா். இதுகுறித்துத் தகவலறிந்த மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று, உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவனைக்கு, கூறாய்வுக்காக அனுப்பினா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: இறந்து கிடந்தவா் மேலூரை அடுத்த அ. மலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஜெ. ராஜபாண்டி (52). பால் பண்ணை, பால் பொருள்கள் மதிப்புக் கூட்டும் நிறுவனம் நடத்தி வந்த இவா், தொழில் விரிவாக்கத்துக்காக ஒரு தனியாா் வங்கியில் கடன் பெற்றாா்.
இதற்கான தவணைத் தொகையை கடந்த சில மாதங்களாக திருப்பிச் செலுத்த முடியாததால், அந்த வங்கி ஊழியா்கள் ராஜபாண்டிக்குச் சொந்தமான நிறுவனத்தை வெள்ளிக்கிழமை மூடி சீலிட்டனா்.
இதனால் மனமுடைந்த அவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து மாட்டுத்தாவணி காவல் நிலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.