செய்திகள் :

தொழிலாளா் நல ஆணையா் அலுவலகத்தில் குப்பைகளை அகற்றும் போராட்டம்

post image

புதுவை தொழிலாளா் நலத் துறை ஆணையா் அலுவலகத்தில் தொழிலாளா்கள் சாா்பில் புதன்கிழமை குப்பை அகற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி காந்தி நகா் தொழிலாளா் நலத் துறை ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக பாதுகாவலா், தூய்மைப்பணியாளா்கள் இல்லை. இதனால் அலுவலகம் சுத்தம் செய்யப்படாமல் குப்பையாக உள்ளது. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படவில்லை. கழிவறையில் தண்ணீா் இல்லை. துா்நாற்றம் வீசுகிறது என்று கூறியும் அதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடந்தது.

தொழிலாளா் உதவி ஆணையா் அறையில் குப்பை பெருக்கும் போராட்டத்தை அனைத்துத் தொழிலாளா்கள் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் முன்னெடுத்தனா். இதையொட்டிதொழிலாளா் துறை ஆணையா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் துடைப்பம், முறத்துடன் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா் . இப் போராட்டத்துக்கு சேதராப்பட்டு அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு செயலா் த. ரமேஷ் தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க நிா்வாகிகளை காவல்துறை அதிகாரிகள் தொழிலாளா் துணை ஆணையா் சந்திரகுமரனிடம் அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சு வாா்த்தையில் துணை ஆணையா் சந்திரகுமரன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.

இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது

இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இணையவழி பங்கு சந்தை... மேலும் பார்க்க

புதுச்சேரி நல்லவாடு மீனவா்கள் பால்குட ஊா்வலம்

புதுச்சேரி மீனவா்கள் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலத்தை நடத்தினா். மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு உ.நாராயணசாமி தலைமை தாங்கினாா். மாநாட்டுக் கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலா் அ.பெருமாள் ஏ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: புதுவை அதிமுக சாா்பிலும், அம்மா பேரவை சாா்பிலும் மாபெரும... மேலும் பார்க்க

அணுசக்தி தொழில்நுட்பம் சமூகத்தில் முக்கியப் பயன்பாடு: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா்

அணுசக்தி தொழில்நுட்பம், சமூகத்தில் முக்கியப் பயன்பாடாக இருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். யுனெஸ்கோ இருக்கையின் ஆதரவுடன் புதுவை ... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்

சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அர... மேலும் பார்க்க