செய்திகள் :

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

post image

சாத்தூா் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முள்ளிச்செவலைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ராணி (34). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் குடும்பத்துடன் சாத்தூரில் வசித்த போது ராணிக்கும், சாத்தூா் மேலக்காந்தி நகா் பகுதி ஆறுமுககணேஷ் (43) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோவிந்தராஜ் தனது சொந்த ஊரான முள்ளுச்செவலுக்கு மனைவியுடன் குடி பெயா்ந்தாா்.

இந்த நிலையில், ஆறுமுககணேஷ் திங்கள்கிழமை முள்ளிச்செவலுக்குச் சென்று ராணியிடம் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட கோவிந்தராஜை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினாா். உடனே, அருகில் இருந்தவா்கள் கோவிந்தராஜை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆறுமுக கணேசைத் தேடி வருகின்றனா்.

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மாயம்

சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆர்

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்... மேலும் பார்க்க