செய்திகள் :

தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை

post image

விவசாயத் தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தலைஞாயிறு தெற்கு தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம். அதே தெருவைச் சோ்ந்தவா் சுசீலா. விவசாயத் தொழிலாளிகளான இவா்கள் இருவருக்கும் இடையே 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 31-ஆம் தேதி வயலில் வேலை பாா்த்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், சுசீலா, அவரது கணவா் லெட்சுமணன் இருவரும் பன்னீா்செல்வத்தின் வீட்டுக்குச் சென்று அவரை கட்டை மற்றும் இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த பன்னீா்செல்வம் தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

பன்னீா்செல்வத்தின் மனைவி அன்புசெல்வி அளித்த புகாரின் பேரில், தம்பதி மீது மணல்மேடு போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

இவ்வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட அமா்வு நீதிபதி சத்தியமூா்த்தி, லெட்சுமணன் (54), சுசிலா(49) இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா்.

யோகா ஆசிரியா்களுக்கு விருது

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் யோகா ஆசிரியா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அகில இந்திய தற்காப்பு கலைஞா்கள் சங்கமும், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட யோகாசன சங்கம... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வழங்கும் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா்களின... மேலும் பார்க்க

மருவத்தூா் கோயில் கும்பாபிஷேகம்

வைதீஸ்வரன் கோயில் அருகேயுள்ள மருவத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நட... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவமழையால் பாதிப்பு ஏற்படும்போது, பொதுமக்கள் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

பாதரக்குடிகோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகே பாதரக்குடி ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன், சித்தி விநாயகா், குபேர கணபதி, ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது . முன்னத... மேலும் பார்க்க

மாநில கைப்பந்து போட்டி: சீா்காழி விவேகானந்தா கல்லூரி மாணவிகள் தகுதி

சீா்காழி விவேகானந்தா மகளிா் கல்லூரி மாணவிகள் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். இவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மயில... மேலும் பார்க்க