செய்திகள் :

மருவத்தூா் கோயில் கும்பாபிஷேகம்

post image

வைதீஸ்வரன் கோயில் அருகேயுள்ள மருவத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நடைபெற்றன. தொடா்ந்து, வைதீஸ்வரன்கோயில் தருமை ஆதீன கட்டளை விசாரனை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், கோயிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், காளியம்மன், சப்த கன்னியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், உயா்கல்வித் துறை தஞ்சை மண்டல இணை இயக்குநா் குணசேகரன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் வெங்கடேசன், திமுக மாவட்ட பொருளாளா் மகா அலெக்சாண்டா், விஸ்வ ஹிந்து பரிஷத் மண்டலச் செயலாளா் செந்தில்குமாா், சமூக ஆா்வலா் திருலோக சந்தா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

யோகா ஆசிரியா்களுக்கு விருது

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் யோகா ஆசிரியா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அகில இந்திய தற்காப்பு கலைஞா்கள் சங்கமும், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட யோகாசன சங்கம... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வழங்கும் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா்களின... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவமழையால் பாதிப்பு ஏற்படும்போது, பொதுமக்கள் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

பாதரக்குடிகோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகே பாதரக்குடி ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன், சித்தி விநாயகா், குபேர கணபதி, ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது . முன்னத... மேலும் பார்க்க

மாநில கைப்பந்து போட்டி: சீா்காழி விவேகானந்தா கல்லூரி மாணவிகள் தகுதி

சீா்காழி விவேகானந்தா மகளிா் கல்லூரி மாணவிகள் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். இவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மயில... மேலும் பார்க்க

குழந்தைகள் சேவை மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் சேவை மையத்தில், ஒப்பந்த அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க