மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்!
தொழிலாளி தற்கொலை
கும்பகோணத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியை சோ்ந்தவா் செல்லப்பா (39) கூலித் தொழிலாளி, இவருக்கு மனைவி ரேவதி (34), 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னையால் மனம் உடைந்த நிலையில் இருந்த செல்லப்பா வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த கும்பகோணம் மேற்கு போலீஸாா் செல்லப்பா சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.