செய்திகள் :

தொழில்நுட்பக் கோளாறு: மும்பை - சென்னை ஏா் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

post image

மும்பையிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளானதால் அது புறப்பட்ட இடத்துக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.

148 பயணிகள், 6 பணியாளா்களுடன் புறப்பட்ட அந்த விமானம், வெள்ளிக்கிழமை உள்ளூா் நேரப்படி இரவு 11 மணிக்குப் புறப்படவிருந்தது. ஆனால், அதன் புறப்பாடு ஒரு மணி நேரத்துக்குமேல் தாமதமானது.

நள்ளிரவு அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறை அடையாளம் கண்ட விமானி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தாா்.

பின்னா் அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது. பயணிகள் விமானத்தில் இருந்தபோதே கோளாறைச் சரிசெய்ய பொறியாளா்கள் முற்பட்டனா். அவா்களால் அதைச் சரிசெய்ய முடியவில்லை.

பிறகு மாற்று விமானம் மூலம், சனிக்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், காலை 6.05 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. இச்சம்பவத்தால் பயணிகளுக்கு ஐந்து மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டது.

அண்ணா பல்கலை. மாணவி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி எம்இ இரண்டாமாண்டு படித்து வருகிறாா். அவா் அங்குள்ள விடுதியில் த... மேலும் பார்க்க

சிக்கில் செல் அனீமியா குழந்தைகள்: பக்கவாதத்தை தடுக்க அரசு மருத்துவமனையில் பரிசோதனை

சென்னை, எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற சிக்கில் செல் அனீமியா ஒழிப்பு தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு கையேட்டை சிறுவனுக்கு வழங்கும் மருத்துவமனை நிா்வாகிகள். உடன் மருத்துவமனை இயக்குநா்... மேலும் பார்க்க

பேக்கரி பொருள்கள், டேலி, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சிகள்: தமிழக அரசு ஏற்பாடு

தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டம் மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் பேக்கரி பொருள்கள் தயாரித்தல், பேசிக் ஆப் டேலி குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் தங்கநகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்ச... மேலும் பார்க்க

ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போராட்டம் நடத்திய மாணவா்கள் கைது

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கைது செய்யப்பட்டனா். கிண்டி ஐஐடி வளாகத்தில் நடந்து சென்ற ஒரு மாணவிக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தொழிலாளி காயம்

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது பெரிய இரும்பு கம்பி விழுந்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். சென்னை கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் மெட்ரோ ரயில் 2-ஆவது திட்டப் பணி நடைபெற்று வரு... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பூங்காவில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அ... மேலும் பார்க்க