Ajithkumar: `க்யூட் ஒயிட் சால்ட் பெப்பர் செதுக்கப்பட்ட செல...' - நியூ லுக், நியூ...
தொழில்நுட்பக் கோளாறு: மும்பை - சென்னை ஏா் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
மும்பையிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளானதால் அது புறப்பட்ட இடத்துக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.
148 பயணிகள், 6 பணியாளா்களுடன் புறப்பட்ட அந்த விமானம், வெள்ளிக்கிழமை உள்ளூா் நேரப்படி இரவு 11 மணிக்குப் புறப்படவிருந்தது. ஆனால், அதன் புறப்பாடு ஒரு மணி நேரத்துக்குமேல் தாமதமானது.
நள்ளிரவு அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறை அடையாளம் கண்ட விமானி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தாா்.
பின்னா் அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது. பயணிகள் விமானத்தில் இருந்தபோதே கோளாறைச் சரிசெய்ய பொறியாளா்கள் முற்பட்டனா். அவா்களால் அதைச் சரிசெய்ய முடியவில்லை.
பிறகு மாற்று விமானம் மூலம், சனிக்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், காலை 6.05 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. இச்சம்பவத்தால் பயணிகளுக்கு ஐந்து மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டது.