செய்திகள் :

``தோல்வியே அறியாத முடிசூடா மன்னன் நான்; பாஜக-வால் தோற்றுவிட்டேன்" - ஜெயக்குமார் ஓப்பன் டாக்

post image

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்திருந்து பேசியிருப்பது 'அ.தி.மு.க - பா.ஜ.க' கூட்டணிப் பேச்சுகளை கிளப்பி விட்டிருக்கிறது.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

சென்னை, ராயபுரம் தொகுதியில் தொடர் வெற்றிக் கண்ட ஜெயக்குமார் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வைத்த கடந்த 2021 தேர்தலில் தோல்வியுற்றார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு குறித்தும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார்.

இது குறித்துப் பேசியிருக்கும் ஜெயக்குமார், "பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்ததால்தான் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. எங்களுடைய ஆட்சி போனதற்குக் காரணமே 'பா.ஜ.க'தான். ராயபுரம் தொகுதியில் தோல்வியே கணாத முடிசூடா மன்னனாக இருந்தவன் நான். 25 ஆண்டுகள் தோல்வியையே நான் பார்த்ததில்லை. தோல்வியே அறியாதவன். என்னுடைய தோல்விக்கும் 'பா.ஜ.க'தான் காரணம்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'பா.ஜ.க' உடன் கூட்டணி வைக்கும்போதே என் தொகுதியில் இருக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் என்னிடம் 'பா.ஜ.க' கூட்டணி வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள். தேர்தல் முடிந்த பிறகு அவர்களை கழட்டிவிட்டுவிடலாம் என நான் அவர்களிடம் கூறியிருந்தேன். அதேபோல தேர்தலுக்குப் பிறகு கழட்டிவிட்டோம். 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்ததால்தான் என் தொகுதியில் இருக்கும் 40,000 சிறுபான்மையினர் ஓட்டுகள் எனக்குக் கிடைக்காமல் போனது. இன்று சட்டமன்றத்திற்குப் போக வேண்டிய நான், என் தொகுதியிலேயே தோல்வியுற்று இருக்கிறேன். மனம் திறந்து சொல்கிறேன். என் தோல்விக்கும், அ.தி.மு.க தோல்விக்கும் 'பா.ஜ.க'தான் காரணம்" என்று பேசியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள... மேலும் பார்க்க

'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேற... மேலும் பார்க்க

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத... மேலும் பார்க்க