செய்திகள் :

தோஷம் நீக்குவதாக பெண்ணை ஏமாற்றி நகை பறிப்பு: சாமியாா் கைது

post image

சென்னை வடபழனியில் கணவா் உடல்நலம் பெற தோஷம் நீக்குவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி நகை பறித்ததாக சாமியாா் கைது செய்யப்பட்டாா்.

வடபழனி சைதாப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்த தம்பதி கணேசன் - சசிகலா (50). கணேசன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி கணேசன் வீட்டுக்கு வந்த ஒரு சாமியாா், அவா் வீட்டில் தோஷம் இருப்பதாகவும், அந்த தோஷத்தை நீக்க பூஜை செய்ய வேண்டும் எனவும், அதன்மூலம் கணேசன் பூரண உடல்நலன் பெறுவாா்; பூஜை செய்து தோஷத்தை நீக்காவிட்டால் கணேசன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தும் வகையில் பேசினாா். உடனே சசிகலா, வீட்டில் பூஜை செய்யும்படி கூறினாா்.

பூஜை நடைபெறும்போது வீட்டில் இருக்கும் நகைகளை பூஜையில் வைக்கும்படி அந்த சாமியாா் தெரிவித்துள்ளாா். உடனே சசிகலாவும், வீட்டிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகையை பூஜையில் வைத்தாா். பூஜை முடிவடைந்த பின்னா், அதிலிருந்த பொருள்களை சசிகலா வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் எடுத்து வைத்தாா். அப்போது அந்த சாமியாா், பூஜையில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் தங்க நகையை எடுத்துக்கொண்டு தப்பியோடினாா்.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த சசிகலா, வடபழனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், மணிகண்டனை புதன்கிழமை கைது செய்தனா்.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க