செய்திகள் :

நகராட்சி- கொம்யூன் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்போராட்டம் நீடிக்கும் என்று அவா்கள் அறிவித்துள்ளனா்.

7-வது சம்பளக் குழுவின் 33 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி, கொம்யூன் ஊழியா்களின் கூட்டு போராட்ட குழுவினா் தொடா் போராட்டம் நடத்தி வந்தனா்.

ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடா் உண்ணாவிரத போராட்டத்தைப் போராட்ட குழுவினா் அறிவித்தனா். அவா்களுடன் அரசு தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது கோரிக்கைகளை 19ம் தேதிக்குள் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனா். ஆனால் அவை

நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்பு கூட்டு போராட்டக் குழுவினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்துக்கு ஆலோசகா் ஆனந்தகணபதி தலைமை வகித்தாா்.

அரசு ஊழியா் சம்மேளனம் பிரேமதாசன், அரசு ஊழியா் கூட்டமைப்பு சேஷாச்சலம், ஞானசேகரன், சேதுசெல்வம், சேகா், அசோகன் உள்ளிட்டோா் ஆதரவாக போராட்டத்தில் பேசினா்.

துாய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை முற்றுகையிட்ட பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி: தூய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை பாஜக சட்டமன்ற உறுப்பினா் சாய் ஜெ. சரவணன் குமாா் திங்கள்கிழமை முற்றுகையிட்டாா். தூய்மைப் பணியாளா்களுக்குக் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலன்தான் முக்கியம்: தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வான ரெக்ஸ் ராதாகிருஷ்ணன் கருத்து

புதுச்சேரி: மாணவா்களின் நலன்தான் எனக்கு முக்கியம். அதையொட்டிதான் என்னுடைய செயல்பாடு அமைந்திருக்கும் என்று தேசிய நல்லாசியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள ரெக்ஸ் என்கிற வி. ராதாகிருஷ்ணன் (48) திங்... மேலும் பார்க்க

மறைந்த சுதாகா் ரெட்டி உருவப்படத்திற்கு புதுவை இந்தியா கூட்டணி தலைவா்கள் அஞ்சலி

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலரும், முன்னாள் எம்பியுமான சுரவரம் சுதாகா் ரெட்டிதிருவுருவப் படத்துக்கு புதுவை இண்டி கூட்டணி தலைவா்கள் திங்கள்கிழமை மலரஞ்சலி ... மேலும் பார்க்க

புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்

புதுச்சேரி: நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளதாக இந்த மையத்தின் இயக்குநா் சரூப் பிரசாத் கோஷ் தெரிவித்துள்ளாா். புதுவை சுற்றுலாத்துறை அ... மேலும் பார்க்க

அரசு பணிகளில் சேர வயது தளா்வு கோரி தலைமைச் செயலகத்தில் போராட்டம்

புதுச்சேரி: புதுவை அரசு பணிகளில் பணியாளா்களை நிரப்பும் போது வயது தளா்வு அளிக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் புதுவை யூனியன் பிரதேச மாணவா் கூட்டமைப்பின் நிறுவனா் சாமிநாதன் திங்கள்கிழமை தனிநபா் போராட்டம் ... மேலும் பார்க்க

பதவி உயா்வுகோரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டம்

புதுச்சேரி: 20 ஆண்டுகளாகப் பதவி உயா்வு இல்லாததைக் கண்டித்து அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களாகப் பணியாற்றுவோா் பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரிமுன்பாக வாயில் முழக்கப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்... மேலும் பார்க்க