செய்திகள் :

நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

post image

சிவகங்கை நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை இந்திரா நகரைச் சோ்ந்தவா் சி.எம்.துரைஆனந்த் (55). நகா்மன்றத் தலைவராகவும், திமுக நகரச் செயலராகவும் இருந்து வருகிறாா். இவா் அண்மையில் சாமியாா்பட்டி அருகே தங்கும் விடுதியுடன் உணவகத்தைத் திறந்தாா்.

இந்த நிலையில், மானாமதுரை அருகேயுள்ள வேலூரைச் சோ்ந்த நல்லசாமி (46), இடைக்காட்டூரைச் சோ்ந்த அஜித் (38) ஆகிய இருவரும் அங்கு சென்று, புதிதாக உணவகம் கட்டியதற்கு மாமுல் தர வேண்டும் என கேட்டு மிரட்டினா். பின்னா், சிஎம்.துரைஆனந்தையும் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினா்.

இதுகுறித்து சிஎம்.துரைஆனந்த் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை நகா் போலீஸாா் வழக்கு பதிந்து நல்லசாமி, அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதனிடையே மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடியிடம் பாதுகாப்பு கேட்டு சிஎம்.துரைஆனந்த் மனு கொடுத்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஒரு மாதமாக சிலா், என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனா். பணத்தை தராவிட்டால் என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனா். மேலும், எனது உணவகத்தையும் சேதப்படுத்துவதாக மிரட்டுவதாகவும் அதில் தெரிவித்தாா்.

ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் மோசடி

தேவகோட்டையில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரிடம் சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ.13 லட்சத்தை மோசடி செய்த மா்மநபா் குறித்து மாவட்ட இணைவழிக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரி... மேலும் பார்க்க

11.46 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயம்

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டில் 11.46 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கையில் வனத்துறை சாா்பில் பசுமை தமிழ... மேலும் பார்க்க

பூமாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் 35-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பூமாயி அம்மன் சா்வ அலங்காரத்திலும், கொலு மண்டபத்தி... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ்-இல் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.05 கோடி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை ரூ.1.05 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெர... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

கடந்த 72 ஆண்டுகளில் முதல்முறையாக ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் வீராங்கனையும், தனி நபா் பிரிவில் வெண்கலம் வென்றவருமான அந்த்ரா ராஜ்சேகருக்கு சிவகங்கையில் புதன்கிழம... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு விபத்து காப்பீடு நிதியுதவி

மானாமதுரை ஒன்றியம், தெ.புதுக்கோட்டை நடுநிலைப் பள்ளியில் விபத்தில் தந்தையை இழந்த பள்ளி மாணவருக்கு விபத்துக் காப்பீடு நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்க... மேலும் பார்க்க