தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்
நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி அருகே காரிப்பட்டியைச் சோ்ந்த ராயப்பன் மனைவி மொ்சி (21). இவா் இ.பி. சாலையில் உள்ள தனியாா் கணினி மையத்துக்குச் சென்றுவிட்டு, இரவு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். இவா்களது வாகனம் மேலப்புதூா் சுரங்கப்பாதை வழியாக கடந்த 05-04-2017 அன்று இரவு வந்தபோது, பின்புறம் மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள், மொ்சி கழுத்தில் அணிந்திருந்த 3.5 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இது குறித்து ராயப்பன் அளித்த புகாரின் பேரில், பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பசுமடத்தைச் சோ்ந்த பி. மதன்ராஜ் (33), பிள்ளைமா நகரைச் சோ்ந்த ஏ. அஜித் (எ) கிளிண்டன் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட 5-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா் எம். டாா்வின் முத்து முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மதன்ராஜ் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.