செய்திகள் :

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை!

post image

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

துபையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உணவகத்தின் கிளைகளை சென்னையில் பல்வேறு இடங்களில் நடிகர் ஆர்யா நடத்தி வருவதாக கூறப்பட்டது.

சென்னை அண்ணா நகர், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த உணவகத்தின் கிளைகள் இருக்கின்றன.

இந்த உணவகங்களில் முதலீடு செய்யப்பட்ட பணத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில், சென்னை அண்ணா நகரில் உள்ள சீ ஷெல் உணவகத்துக்கு இன்று காலை வருகைதந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்,

அதேபோல், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட கிளைகளிலும் 8 குழுக்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் பிரிந்து சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சீ ஷெல் உணவகத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை! - டிரம்ப்பிடம் மோடி பேச்சு

சாகித்ய விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

பால சாகித்ய புரஸ்கார் விருதிற்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் சரவணன் மற்றும் யுவ புரஸ்கார் விருதிற்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹர் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 18) சென்னை வேளச்சேரி அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் ரூ. 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு வீரர்களுக்க... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு!

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாந... மேலும் பார்க்க

தீர்வு கண்ட பிறகும் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் எதற்காக? - அமைச்சர் கேள்வி

'மா' சாகுபடி விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பிறகும் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது எதற்காக? என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். '... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சியில்லை என அமைச்சர் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? - அன்புமணி

ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2 விருது!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2025 உலகளாவிய சுற்றுச்சூழல் விருது மற்றும் நிலைத்தன்மைக்கான விருது ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.புதுதில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநா... மேலும் பார்க்க