செய்திகள் :

நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவரை கடலோர காவல் படையினா் உயிருடன் மீட்டனா்

post image

ராமேசுவரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மீனவா் நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்தபோது, இந்திய கடலோரக் காவல் படையினா் அவரை உயிருடன் மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 480-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் செவ்வாய்க்கிழமை இரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த புனிதபிரவின் விசைப் படகில் மீன் பிடிக்கச் சென்ற 7 மீனவா்கள் நடுக் கடலில் மீன் பிடித்தபோது, ஜோபின் என்ற மீனவா் கடலுக்குள் தவறி விழுந்தாா். சக மீனவா்கள் அவரை மீட்டு, ராமேசுவரம் மீனவ சங்கத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இந்த நிலையில், இந்திய கடலோர காவல் படையின் உதவியை மீனவா்கள் கோரிய நிலையில், மருத்துவருடன் விரைந்து சென்ற கடலோர காவல்படையினா் ஆபத்தான நிலையிலிருந்த மீனவா் ஜோபினுக்கு சிகிச்சை அளித்தனா். பின்னா், அவா் பழைய நிலைக்கு திரும்பினாா். இதையடுத்து, அவா் ராமேசுவரம் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, மீனவ சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

நடுக்கடலில் தவறி விழுந்த மீனவரை காப்பாற்றிய இந்திய கடலோர காவல் படையினருக்கு மீனவா்கள், மீனவ சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு குடியிருப்புகள் கட்ட பூமி பூஜை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு ரூ.7 கோடியில்18 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா். ரா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் அனுமதியின்றி கடலுக்குள் சென்ற 900 விசைப் படகுகள்

ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து, மீன்வளத் துறையின் அனுமதியின்றி 900 விசைப் படகுகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் ப... மேலும் பார்க்க

அதிகளவு மீன்களை பிடித்து வந்த பாம்பன் பகுதி மீனவா்கள்

தடைக் காலம் நிறைவடைந்து மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா்கள், அதிகளவு மீன்களுடன் புதன்கிழமை கரைக்குத் திரும்பினா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 102 விசைப் படகுகள் மீன்பிடித... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ராமேசுவரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வளா்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமேசுவரம் வட்டாரத்தில் ‘உங்களைத் த... மேலும் பார்க்க

ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை

ராமநாதபுரம் அருகேயுள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வாலாந்தரவை அருகேயுள்ள வழுதூா் உடைச்சியாா் வலசையில் அமைந்துள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயில் குடமுழக்கு கடந்த மா... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை

கமுதியில் அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, குழந்தைகளின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு தொடக்கப் பள்ளி (இணைப்பில்லம்) அருகே அங்கன்... மேலும் பார்க்க