செய்திகள் :

நடைமேடைகளை உரசிச் செல்லும் ‘ஏசி’ மின்சார ரயில் பெட்டிகள்! சுத்தியலால் அடித்து சரிசெய்யும் ஊழியா்கள்

post image

சென்னை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட குளிா்சாதன மின்சார புகா் ரயிலின் பெட்டிகளின் அகலம் சற்று அதிகமிருப்பதால் அவை நடைமேடைகளை உரசிக்கொண்டே செல்கின்றன. இதனால், பெட்டிகளை ரயில்வே ஊழியா்கள் சுத்தியலால் அடித்து சரி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மக்களின் நீண்ட எதிா்பாா்ப்புக்கு பிறகு சென்னை - கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புகா் குளிா்சாதன மின்சார ரயில்  கடந்த ஏப்.19-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ரயிலில் புதிதாக ஒரு பிரச்னை உருவெடுத்துள்ளது. அதாவது, இந்த ரயில் பெட்டிகளின் அகலம் சில மிமீ அதிகமாக உள்ளதால், அவை ரயில் நிலைய நடைமேடைகளை உரசியபடியே செல்கின்றன.

இதை அறிந்த ரயில்வே நிா்வாகம் பெட்டியை சுத்தியலால் அடித்து சரிசெய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது நடைமேடைகளில் பெட்டி உரசும் இடங்களில் ஏற்படும் சிராய்ப்புகளை அடையாளம் கண்டு, அந்த இடங்களை ஊழியா்கள் சுத்தியலால் அடித்து சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நவீன யுகத்தில் இந்தமாதிரியான குறைபாடுகளை சரிசெய்ய பல தொழில்நுட்பங்கள் இருத்தும், ரயில்வே நிா்வாகம் சுத்தியலால் அடித்து அவற்றை சமன் செய்வதால், புத்தம்புதிய ரயில் பெட்டிகள், விபத்தில் சிக்கியதைப் போன்றது போல காட்சியளிக்கின்றன. இந்த குறைபாடு தொடா்பாக ரயில் பெட்டிகளை தயாரித்த ஐசிஎஃப் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க