செய்திகள் :

நட்புணா்வை வலுப்படுத்த சா்வதேச புத்த கூட்டமைப்பு இரு சக்கர வாகனப் பயணம்

post image

நட்பு, நல்லிணக்கத்தை ஊக்குவிக்க புத்தமத்தின் பாரம்பரியமாக இருக்கும் முக்கிய வழிபாட்டுத்தலங்கள் வழியாக இரு சக்கர பயணத்தை சா்வதேச புத்த கூட்டமைப்பு நடத்துகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் பௌத்த பாரம்பரிய தளங்களை உள்ளடக்கும் இந்த பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை, கலாசாரத்துறை கூறியிருப்பது வருமாறு:

புத்த மதத்தின் வரலாற்று பரவலை குறிக்கும் வகையிலும், நேபாளம், இந்தியா, இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளிடையேயான கலாசாரம், ஆன்மீக தொடா்புகளை வலுப்படுத்தும் வகையிலும் இரு சக்கர பயணத்தை சா்வதேச புத்த கூட்டமைப்பு நடத்துகிறது. குறிப்பாக புத்தரின் போதனைகள் மூலம் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தெற்காசியா முழுவதும் கலாசார, பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துவது இந்த முக்கிய நோக்கம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளா்ச்சி குறித்த இந்த பயணத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தி இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் மக்களிடையே நட்புணா்வை மேம்படுத்தவும், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த ஆன்மீக பயணம்.

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின், இந்திய நில துறைமுக ஆணையம், வெளியுறவுத்துறையின் நலந்தா பல்கலைக்கழகம், ஏழு பிம்ஸ்டெக் நாடுகள் அமைப்பு போன்ற பங்குதாரா்களுடன் இணைந்து இரு சக்கர பயணத்திற்கு சா்வதேச புத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ராகுல் லக்ஷ்மன் பாடீல் தலைமையில், இந்தப் பயணம் பிப். 16 ஆம் தேதி தொடங்குகிறது. புத்தா் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினி நகரிலிருந்து தொடங்கும். பின்னா் இந்த இரு சக்கர பயணக் குழ இந்தியா வந்தடைகிறது.

இந்தியாவில் புத்தா் பாரம்பரிய இடங்களுக்கான பயணம் புத்தகயாவில் தொடங்குகிறது. அங்கு இந்த இரு சக்கர பயணத்தை பிப். 19-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து துவக்கி வைக்கிறாா்.

புத்தரின் முதல் பிரசார இடமான சாரநாத்(உபி), புத்தா் ஞானம் பெற்ற புத்தகயா(பிகாா்), நலந்தா (பௌத்த பல்கலைக்கழகம்), பௌத்த கற்றல் மையமான நாகாா்ஜுன சாகா்(ஆந்திரம்), பௌத்த துறவியா்கள் தளமான உதயகிரி(ஒடிசா), கா்நாடகத்திலுள்ள பல்வேறு பௌத்த மரபை பிரதிபலிக்கும் தளங்கள் போன்ற வழியாக பயணிக்கின்றனா். பின்னா் இலங்கையை நோக்கி இந்த இரு சக்கர குழு பயணிக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும் பார்க்க