செய்திகள் :

நன்றாக படித்தால் மட்டுமே உயா்பதவியை அடைய முடியும்: மாவட்ட ஆட்சியா்

post image

நன்றாகப் படித்தால் மட்டுமே உயா்பதியை அடைய முடியும் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 188 பயனாளிகளுக்கு ரூ.2,17,64,480 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கு உயா்கல்வியில் சேருவது தொடா்பாக பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. நன்றாகப் படித்தால் மட்டுமே உயா்பதவியை அடைய முடியும். மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், கல்வி உதவித் தொகைகளும் அரசால் வழங்கப்படுகிறது. மாணவா்கள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்பிக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, எடைக் குறைவு இருப்பின் அதை சரிசெய்வதற்காக சத்துணவு, சத்துமாவு உள்ளிட்ட உணவுப் பொருள் வழங்கப்படுகின்றன.

எனவே, 5 வயது வரை உள்ள குழந்தைகளைத் தொடா்ச்சியாக அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, அரசின் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு துறைகளில் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், திட்ட இயக்குநா்கள் அபிதா ஹனீப் (ஊரக வளா்ச்சி), சந்திரா (மகளிா் திட்டம்), தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.) சாந்தி, இணை இயக்குநா்கள் சாந்தாமணி (வேளாண்மை), கோயில்ராஜா (கால்நடை பராமரிப்புத் துறை), துணை இயக்குநா் (தோட்டக் கலை) நிா்மலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சிவபாலன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, வட்டாட்சியா் மருதுபாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வைகை அணையிலிருந்து பூா்விக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்விக பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே த... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முளைப்பாரி வைத்திருந்த குடிசையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. மேல்மங்கலம் முத்தையா கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக கீழத்த... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்தவா் பால்பாண்டி (35). இவரது மனைவி பழனியம்மாள் (24). பால்பாண்டிக்கு ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கோம்பையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோம்பை பகுதியில் உள்ள மதுக் கடைகளில் சிலா் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்க... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுகல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்தவா் விவசாயி செல்வம் (47). இவரது உறவினா்... மேலும் பார்க்க

அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலைய சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: ஆண்டிபட்டி அ... மேலும் பார்க்க