செய்திகள் :

நம்மாழ்வாா் விருதுபெற விவசாயிகளுக்கு அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கைமுறை விவசாய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், நம்மாழ்வாா் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் தன்னாா்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2025-26 -ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் உயிா்ம வேளாண்மையில் சிறந்து விளங்கி மற்ற விவசாயிகளையும் ஊக்குவிக்கும் உயிா்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நம்மாழ்வாா் விருது பெற விரும்பும் விவசாயிகள்

ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஞ்ழ்ண்ள்ய்ங்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் வலைதளத்தில் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு ஏக்கா் பரப்பளவில் உயிா்ம வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயிா்ம வேளாண்மையில் ஈடுபட்டு, அதற்கானச் சான்று பெற்றிருக்க வேண்டும். முழுநேர உயிா்ம விவசாயியாக இருக்க வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்படும் 3 விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வாா் பெயரில் விருதுடன் தலா ரூ. 2 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

இவ் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஆடி பிறப்பு சிறப்பு பூஜை

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ காலபைரவரு... மேலும் பார்க்க

தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள் சாலை மறியல்: பெரம்பலூரில் 171 போ், அரியலூரில் 280 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமைல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா், அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 451 பேரை போலீஸா... மேலும் பார்க்க

உரம் விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநா் ஆய்வு

பெரம்பலூா் வட்டாரத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.இந்த ஆய்வில் உரம் இருப்பு, உரம் இறக்குமதி ச... மேலும் பார்க்க

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர விண்ணப்பிக்கலாம்

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க