செய்திகள் :

நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் ‘சந்திரமுகி’ படக் காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி மனு

post image

நடிகை நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில், ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏ.பி.இண்டா்நேஷ்னல் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகை நயன்தாராவின் திருமணம் மற்றும் அவா் ஏற்கெனவே நடித்த படங்களில் இடம்பெற்ற காட்சிகளைக் கொண்ட ஆவணப்படம் கடந்த 2024-ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

அந்த ஆவணப் படத்தில் ’சந்திரமுகி’ படத்தில் நயன்தாரா நடித்த காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்தப் படத்தின் பதிப்புரிமையைப் பெற்றுள்ள நாங்கள், அந்தக் காட்சிகளை நீக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் காட்சிகள் அகற்றப்படவில்லை.

எனவே ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் காட்சிகளை ஆவணப் படத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்: ஒசூரில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

ஒசூர் : தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக ஒசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.ஒசூரில் இன்று காலை தொ... மேலும் பார்க்க

மதுபோதை + கூகுள் மேப் = கடலுக்குள் இறங்கிய கார்!

சிதம்பரம்: மதுபோதையில் கூகுள் மேப்பை பின்பற்றி காரை இயக்கிய ஓட்டுநர், தவறுதலாக கடலுக்குள் காரை இறக்கியுள்ளார்.சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூர் வழியாக காரில் பயணம் செய்துள்ளனர். கடலூர் துறைமுகத்திலிரு... மேலும் பார்க்க

தமிழக முன்னேற்றத்துக்காக உழைக்கும் முதல்வர் ஸ்டாலின்: டிஆர்பி ராஜா

ஒசூர் : தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார் நமது முதல்வர் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.ஒசூரில் இன்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்... மேலும் பார்க்க

ஒசூர் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

ஒசூரில் இன்று நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.முன்னதாக, இன்று காலை சென்னையிலிருந்து முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க ஒசூர் வந்தடைந்தார் முதல்வர் மு.... மேலும் பார்க்க

செப். 14-ல் தமிழகம் வருகிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற செப். 14 ஆம் தேதி சென்னை வர உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி சி... மேலும் பார்க்க

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.மேலும், அன்புமணியிடம் பாமகவைச் சேர்ந்தவர்கள் எவ்வித தொடர்பு... மேலும் பார்க்க