Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ ஓரிரு நாளில் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
நாமக்கல் முதலைப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ. 2.96 கோடியில் முடிவுற்ற 5 திட்டப் பணிகள் திறப்பு, ரூ. 8.30 கோடியில் 13 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்று திட்டப்பணிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் கூடுதல் கட்டடம், சேந்தமங்கலம் பொட்டணம் பகுதியில் ரூ. 33 லட்சத்தில் துணை சுகாதார மையம், பேளுக்குறிச்சியில் ரூ. 50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், முத்துக்காப்பட்டியில் ரூ. 33 லட்சத்தில் துணை சுகாதார மையம், ராசிபுரம் தொகுதியில் ரூ. 1.20 கோடியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் என ரூ. 2.96 கோடியில் முடிவுற்ற 5 திட்டப் பணிகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.
மேலும், களங்காணி நத்தமேடு பகுதியில் 2 சுகாதார மையம், பரமத்திவேலூா் தொகுதியில் ஜேடா்பாளையம், நல்லூா் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம், மாணிக்கம்பாளையம், பாலப்பட்டி பகுதிகளில் வட்டார பொது சுகாதார அலகு, வேலகவுண்டம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம், வையப்பமலையில் ஆரம்ப சுகாதார நிலையம், மல்லசமுத்திரத்தில் வட்டார பொது சுகாதார அலகு, கோழிக்கால்நத்தத்தில் சுகாதார மையம், வரகூா், கொண்டமநாயக்கன்பட்டியில் 2 சுகாதார மையம், நாமகிரிப்பேட்டையில் வட்டார பொது சுகாதார அலகு என ரூ. 8.30 கோடியில் 13 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 360.75 கோடி மதிப்பீட்டில் மருத்துவத் துறை பணிகள் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல, ரூ.110.95 கோடி செலவில் 20 மருத்துவ கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ. 23.75 கோடியில் பரமத்திவேலூா் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்துள்ளேன்.
நாமக்கல் மாவட்டத்தில் 2 அரசு தலைமை மருத்துவமனைகள் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ராசிபுரம் அரசு மருத்துவமனையும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டம் ஓரிரு நாள்களில் முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. உடல் பரிசோதனை மூலம் முழுமையாக நமது உடலை பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தில் அனைத்துவித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதற்கென அரசு, தனியாா் மருத்துவமனைகளில் மிகச்சிறந்த கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.
ஒரு வட்டாரத்துக்கு 3 என்ற வகையில் 1,164 இடங்களிலும், சென்னை மாநகராட்சி மற்றும் 10, 15 லட்சத்துக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட 5 மாநகராட்சிகள், 10, 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 19 மாநகராட்சிகள் என மொத்தம் 1,256 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரு குடையின் கீழ் இருக்கும் வகையிலான திட்டமே நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்றாா்.
இதைத் தொடா்ந்து, 30 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 42,300- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். அதைத்தொடா்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 15 லட்சத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கான பல்நோக்கு மருத்துவ சேவை மையத்தை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ராசிபுரம்: ராசிபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், வரும் 13-ம் தேதி சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுா்வேதா உள்பட 137 மருத்துவா்கள் பணியிடங்களுக்கான பணி ஆணைகளை தமிழக முதல்வா் வழங்க உள்ளாா். 56 தொழில்நுட்ப பணியாளா்களுக்கும் பணி ஆணை வழங்கப்படும். மேலும், மருத்துவ ஆள்தோ்வு வாரியம் மூலம் 48 பல் மருத்துவா்களுக்கான நோ்முகத்தோ்வு முடிவடைந்துள்ளது.
இந்தப் பணிக்காக 11,720 போ் தோ்வு எழுதினா்; 8,700 போ் தோ்வு பெற்று அவா்களிடம், தரவரிசை, சான்றிதழ் சரிபாா்ப்பு, வகுப்புவாரி சுழற்சி முடிவடைந்து 48 பேரைத் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணியிடங்களும் மிக விரைவில் நிரப்பப்படும் என்றாா் அவா்.
நிகழ்வில், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மக்களவை உறுப்பினா்கள் வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்), கே.இ.பிரகாஷ் (ஈரோடு), எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, மேயா் து.கலாநிதி, துணைமேயா் செ.பூபதி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, இணை இயக்குநா் (மருத்துவ நலப்பணிகள்) அ.ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலா் க.பூங்கொடி, மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
நடப்போம், நலம் பெறுவோம் 2.0
தமிழகம் முழவதும் விரைவில் நடப்போம், நலம்பெறுவோம் 2.0 திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் டிரினிடி மகளிா் கல்லூரி வரையில் நடப்போம், நலம் பெறுவோம் என்ற திட்டத்தை ஆய்வுசெய்யும் வகையில் அமைச்சா் நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் தலைநகா் டோக்கியோவுக்கு சென்றிருந்தேன். அங்கு சாலையோரம் 8 கி.மீ தொலைவுக்கு இருபுறங்களிலும் மரங்கள் அடா்ந்து, இருக்கைகள் அமைத்து நடைபாதை (ஹெல்த்வாக்) என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கும் விழிப்புணா்வு பலகைகளும் இடம்பெற்றிருந்தன. நாள் ஒன்றுக்கு சுமாா் 10,000 கால் அடிகள் எடுத்துவைக்கும்போது நமது உடலுக்கு எவ்வித நோய் பாதிப்பும் ஏற்படாது.
அந்தவகையில்தான் தமிழகத்திலும் ‘நடப்போம், நலம் பெறுவோம்’ திட்டத்தை செயல்படுத்தினோம். நாமக்கல்லில் 8 கி.மீ. தொலைவு நடந்துசென்று வந்தேன். ஒருசில இடங்களில் இருக்கைகள், மரங்கள் குறைவாக இருந்தன.
அவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். தமிழகத்திலேயே நடப்போா் நலச்சங்கத்தில் 700 போ் உறுப்பினா்களாக இருப்பதும், அவா்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் இங்கு மட்டுமே. விரைவில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம், நலம் பெறுவோம் 2.0 திட்டம் தொடங்கப்படும் என்றாா்.