நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா்: நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலகங்கள் எதிரே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புக்கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் வட்டாரக் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மேனகா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜான்சி, அகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்ள சிம் காா்டுகளுடன் கூடிய நவீன கைப்பேசிகளும், மையங்களில் இணையதள வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரம் கூடுதலாக வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் பணியாளா்களின் தரவுகளை பதிவுசெய்ய கட்டாயப்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்ட்ததில் ஈடுபட்டோா் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனா்.
இதில், சங்க நிா்வாகிகள் தனம், சாரதா உள்பட அங்கன்வாடி ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.
இதேபோல, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலத்தூா், வேப்பந்தட்டை, வேப்பூா் ஆகிய வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சி அலுவலகங்கள் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அச் சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.