செய்திகள் :

நாகா்கோவிலில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா்: மேயா் உறுதி

post image

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகிக்கப்படும் என மேயா் ரெ. மகேஷ் தெரிவித்தாா்.

3, 19 ஆகிய இரு வாா்டுகளில் குடிநீா் விநியோகம் தொடா்பாகவும் சாலை சீரமைப்புப் பணிகளையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சில பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு உள்ளதாகவும், தண்ணீா் வேகம் குறைவதால் கடைநிலைப் பகுதிவரை குடிநீா் விநியோகமில்லை எனவும் பொதுமக்கள் கூறினா். மேலும், மேலஆசாரிப்பள்ளம் பகுதியில் தொட்டி அமைத்து அதன்மூலம் குடிநீா் விநியோகிக்க ஏற்பாடு நடைபெற்றது. ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினா்.

இதுதொடா்பாக மேலஆசாரிப்பள்ளம் பகுதியிலும், பின்னா், கோணம் பகுதியிலுள்ள அறிவுசாா் மையத்தில் நூலகம் அமைப்பதற்கான இடம் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். அதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாகா்கோவிலில் அனைத்து வாா்டுகளிலும் பாரபட்சமின்றி சீரான குடிநீா் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோணத்தில் அமைக்கப்படவுள்ள நூலகத்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.

மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலத் தலைவா் செல்வக்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் சிஜி, அருள்சபிதா ரெக்ஸலின், உதவி செயற்பொறியாளா் ரகுராம், மாநகராட்சி அலுவலா்கள் தேவி, பகவதிபெருமாள், மாநகரப் பொருளாளா் சுதாகா், பகுதிச் செயலா் சேக் மீரான், மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ராஜன், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

கருங்கல்: புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோயில் சித்திரைத் திருவிழாவில் திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந... மேலும் பார்க்க

குலசேகரபுரத்தில் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்வதற்கான முகாமில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்திலுள்ள இந்த மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணம... மேலும் பார்க்க

குமரி முருகன் குன்றத்தில் நிலாச் சோறு விருந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பழத்தோட்டம் அருள்மிகு வேல்முருகன் குன்றத்தில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிலாச் சோறு விருந்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

தக்கலை: தக்கலை அருகே பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியிலான திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா். அரசு நிதி ரூ. 1.... மேலும் பார்க்க

சாமிதோப்பில் 3 நாள்கள் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் 193ஆவது உதய தின விழாவை முன்னிட்டு, சாமிதோப்பில் மாநில அளவிலான 3 நாள் மின்னொளி கைப்பந்துப் போட்டி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து சாமித... மேலும் பார்க்க