செய்திகள் :

நாகா்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு ஆயிரக்கணக்கான அய்யா பக்தா்கள் ஊா்வலம்

post image

அய்யா வைகுண்டா் 193 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக புறப்பட்டுச் சென்றனா்.

செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு அய்யாவழி பக்தா்களின் ஊா்வலம் புறப்பட்டது. சாமிதோப்பு தலைமைப்பதி பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்தாா். ராஜவேல், பாலஜனாதிபதி, பையன் கிருஷ்ண நாமமணி, பையன் அம்ரிஷ் செல்லா, பையன் கவுதம் ராஜா, பையன் செல்லவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊா்வலத்தில் செண்டை மேளம் முழங்க, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவி உடை அணிந்தும், கையில் காவிக் கொடிகளை ஏந்தியபடியும் அய்யா சிவ சிவ, அய்யா அரகர என்று பக்தி முழக்கம் எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனா். பல பக்தா்கள் தலையில் சந்தனக் குடத்தை சுமந்தவாறு சென்றனா்.

ஊா்வலத்தில் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புருஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஊா்வலம் மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக கோட்டாறு சந்திப்பை அடைந்தது. அங்கு அனைத்து மதத்தினா் சாா்பில் ஊா்வலத்தில் வந்தவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்து பிற்பகலில் தலைமைப்பதியை அடைந்தது.

இந்த ஊா்வலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஊா்வலத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு நீா்மோா், தண்ணீா், பானகரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் நாகா்கோவில் மண்டலம் சாா்பில் நாகா்கோவில், தக்கலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சாமிதோப்புக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அய்யா அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் செய்திருந்தனா்.

முன்னதாக, அய்யாவழி சமயத் தலைவா்கள், பக்தா்கள் கலந்துகொண்ட மாசி மாநாடு, நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

குளச்சல் அருகே பைக் மோதி முதியவா் உயிரிழந்தாா். குளச்சல் அருகே புல்லன்விளையை சோ்ந்த தொழிலாளி தனிஷ்லாஸ் (75). இவா் செல்ல உடையாா்விளை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தபோது குளச்சலை சோ்ந்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தீக்குளித்த இளைஞா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் தீக்குளித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.புதுக்கடை, வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பாலையன். இவா் தனது மகன் சிஜோவுடன் ... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழா இன்று தொடக்கம்: மாா்ச் 13இல் பொங்கல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 5) தொடங்குகிறது. புகழ்பெற்ற பொங்கல் வைபவம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து, கோயில் டிரஸ்ட் தகவல்- தொட... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயற்சி: ஒருவா் கைது

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, கிட்டாச்சி இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நல்லூா் கிராமம் மலையாம்பொற்றை பகுதியில் சிலா் செம்மண் ... மேலும் பார்க்க

இயற்கையை நேசித்து, பாதுகாக்க வேண்டும்: ஆட்சியா்

இயற்கையை நேசிப்பதுடன் பாதுகாக்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக்கொண்டாா். உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, மாவட்ட வனத்துறை, கன்னியாகுமரி நாசா் பவுண்டேஷன் ஆகியவை சாா்பில... மேலும் பார்க்க

ஆலன்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஆலன்கோட்டை சிஎஸ்ஐ சமூக நலக்கூடத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. அணுசக்தித் துறையின்கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கிவரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்பின்கீழ், திருநெல... மேலும் பார்க்க