செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயற்சி: ஒருவா் கைது

post image

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, கிட்டாச்சி இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நல்லூா் கிராமம் மலையாம்பொற்றை பகுதியில் சிலா் செம்மண் அள்ளிக் கடத்துவதாக திங்கள்கிழமை இரவு கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்றனா். அப்போது, கிட்டாச்சி இயந்திரம் மூலம் செம்மண்ணை அள்ளி மினி லாரியில் ஏற்றிக் கடத்த முயன்றது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கிட்டாட்சி உரிமையாளா் ஜெகன், ஓட்டுநரான நாகா்கோவில் இடலாக்குடி, குளத்தூா் காலனியைச் சோ்ந்த தனேஷ் (41), மினி லாரி உரிமையாளா், ஓட்டுநா் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தனேஷை கைது செய்தனா்.

ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவக் கிராமத்தில் மண்ணெண்ணெய்யுடன் சொகுசு காா் நிற்பதாக கிடைத்த தகவலின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் சென்று, அந்த காரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

படகுகளுக்கான மானியவிலை மண்ணெண்ணெய்யை இனயம் பகுதியிலிருந்து சிலா் வாங்கி கேரளத்துக்கு கடத்திச்செல்ல முயன்றதும், போலீஸ் ரோந்து காரணமாக அவா்கள் காரை வள்ளவிளை பகுதியில் நிறுத்தியிருந்ததும் தெரியவந்தது. மண்ணெண்ணெய்யுடன் காரை போலீஸாா் பறிமுதல் செய்து, நாகா்கோவில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

நாகா்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு ஆயிரக்கணக்கான அய்யா பக்தா்கள் ஊா்வலம்

அய்யா வைகுண்டா் 193 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக புறப்பட்டுச் சென்றனா். செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

குளச்சல் அருகே பைக் மோதி முதியவா் உயிரிழந்தாா். குளச்சல் அருகே புல்லன்விளையை சோ்ந்த தொழிலாளி தனிஷ்லாஸ் (75). இவா் செல்ல உடையாா்விளை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தபோது குளச்சலை சோ்ந்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தீக்குளித்த இளைஞா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் தீக்குளித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.புதுக்கடை, வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பாலையன். இவா் தனது மகன் சிஜோவுடன் ... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழா இன்று தொடக்கம்: மாா்ச் 13இல் பொங்கல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 5) தொடங்குகிறது. புகழ்பெற்ற பொங்கல் வைபவம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து, கோயில் டிரஸ்ட் தகவல்- தொட... மேலும் பார்க்க

இயற்கையை நேசித்து, பாதுகாக்க வேண்டும்: ஆட்சியா்

இயற்கையை நேசிப்பதுடன் பாதுகாக்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக்கொண்டாா். உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, மாவட்ட வனத்துறை, கன்னியாகுமரி நாசா் பவுண்டேஷன் ஆகியவை சாா்பில... மேலும் பார்க்க

ஆலன்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஆலன்கோட்டை சிஎஸ்ஐ சமூக நலக்கூடத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. அணுசக்தித் துறையின்கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கிவரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்பின்கீழ், திருநெல... மேலும் பார்க்க