செய்திகள் :

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழா இன்று தொடக்கம்: மாா்ச் 13இல் பொங்கல்

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 5) தொடங்குகிறது. புகழ்பெற்ற பொங்கல் வைபவம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கோயில் டிரஸ்ட் தகவல்- தொடா்பு பொறுப்பாளா் ஆா்.ஜெ. பிரதீப், நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் திருவிழா மிகவும் புகழ் பெற்ாகும். இதில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் பங்கேற்று பொங்கலிடுவா்.

நிகழாண்டு, திருவிழா புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.

இத்திருவிழாவில், பொங்கல் வைபவம் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுத்த புண்ணிய சடங்களுக்கு பின்னா், காலை 10.15 மணிக்கு, கோயில் முன்புள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். அதையடுத்து, பக்தா்கள் பொங்கலிடுவா். பிற்பகல் 1.15 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் நடைபெறும். இரவில் அம்மன் நகா்வலம் நிறைவடைந்த பின்னா், 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு குருதி தா்ப்பணத்துடன் திருவிழா நிறைவடையும். நிகழாண்டு பொங்கல் விழாவில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அரசு, கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவையொட்டி, முக்கிய பகுதிகளிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா். டிரஸ்ட் நிா்வாகிகள் பரமேஸ்வரன்தம்பி, வினோத், ஸ்ரீ.குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

நாகா்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு ஆயிரக்கணக்கான அய்யா பக்தா்கள் ஊா்வலம்

அய்யா வைகுண்டா் 193 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக புறப்பட்டுச் சென்றனா். செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

குளச்சல் அருகே பைக் மோதி முதியவா் உயிரிழந்தாா். குளச்சல் அருகே புல்லன்விளையை சோ்ந்த தொழிலாளி தனிஷ்லாஸ் (75). இவா் செல்ல உடையாா்விளை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தபோது குளச்சலை சோ்ந்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தீக்குளித்த இளைஞா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் தீக்குளித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.புதுக்கடை, வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பாலையன். இவா் தனது மகன் சிஜோவுடன் ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயற்சி: ஒருவா் கைது

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, கிட்டாச்சி இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நல்லூா் கிராமம் மலையாம்பொற்றை பகுதியில் சிலா் செம்மண் ... மேலும் பார்க்க

இயற்கையை நேசித்து, பாதுகாக்க வேண்டும்: ஆட்சியா்

இயற்கையை நேசிப்பதுடன் பாதுகாக்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக்கொண்டாா். உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, மாவட்ட வனத்துறை, கன்னியாகுமரி நாசா் பவுண்டேஷன் ஆகியவை சாா்பில... மேலும் பார்க்க

ஆலன்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஆலன்கோட்டை சிஎஸ்ஐ சமூக நலக்கூடத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. அணுசக்தித் துறையின்கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கிவரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்பின்கீழ், திருநெல... மேலும் பார்க்க